தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள் 0
– பாறுக் ஷிஹான் –தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சித்து யாழ்ப்பாணம் நகரப்பகுதி எங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அழைத்துச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன், ஜனாதிபதியின் முன்னிலையில் தனது மகளின் பிறந்த நாளினை கேக் வெட்டி கொண்டாடியிருந்தார்.இந்நிலையில், குறித்த சுவரொட்டிகளில் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, ‘காணாத உறவுகளை