Back to homepage

பிரதான செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இலங்கையில் அறிவிக்கப்பட்டமைக்கு அமெரிக்கா வரவேற்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இலங்கையில் அறிவிக்கப்பட்டமைக்கு அமெரிக்கா வரவேற்பு 0

🕔26.Jul 2024

ஜனாதிபதித் தேர்தல் – செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதை, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் வரவேற்றுள்ளார். ‘எக்ஸ்’ தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில் மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டுள்ளதோடு, ஜனநாயகத்துக்கான இலங்கையின் நீண்டகால அர்ப்பணிப்பை இந்த அறிவிப்பு நிரூபிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ‘ஜனநாயகத்துக்கான இலங்கையின் நீண்டகால அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் செப்டம்பர் 21ஆம்

மேலும்...
பசில் – ரணில் நேற்றிரவு சந்திப்பு

பசில் – ரணில் நேற்றிரவு சந்திப்பு 0

🕔26.Jul 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வியாழக்கிழமை இரவு சந்தித்துப் பேசியுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்பான

மேலும்...
ஜனாதிபதித் தேர்தல்: ரணில் விக்ரமசிங்க கட்டுப்பணம் செலுத்தினார்

ஜனாதிபதித் தேர்தல்: ரணில் விக்ரமசிங்க கட்டுப்பணம் செலுத்தினார் 0

🕔26.Jul 2024

ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா – ரணில் விக்ரமசிங்க சார்பில் கட்டுப் பணத்தை கையளித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வைப்புத் தொகையை இன்று (26) காலை 8.30 மணி முதல் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்படுவதற்கு முந்தைய நாளான ஓகஸ்ட் 14ஆம் திகதி

மேலும்...
பதில் பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கு ஜனாதிபதியால் முடியாது: பிரதமர் தெரிவிப்பு

பதில் பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கு ஜனாதிபதியால் முடியாது: பிரதமர் தெரிவிப்பு 0

🕔26.Jul 2024

பதில் பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் ஜனாதிபதியிடம் தற்போது இல்லை என – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (26) விசேட உரையாற்றிய பிரதமர், பொலிஸ் மா அதிபரின் பதவி தற்போதைக்கு வெற்றிடமாகவில்லை எனவும் கூறினார். தேசபந்து தென்னகோன் – பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதற்கு நேற்று முன்தினம் தொடக்கம்

மேலும்...
ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது 0

🕔26.Jul 2024

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்றைய (ஜுலை 26) திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு ஓகஸ்ட் 15ஆம் திகதி கோரப்படவுள்ளது. எனவே, இன்று முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி நண்பகல் 12

மேலும்...
அட்டாளைச்சேனை வைத்தியசாலை குறைபாடு தொடர்பில் வெளியிடப்பட்ட ‘புதிது’ செய்திக்குப் பலன்: பிராந்திய பணிப்பாளர் களத்துக்கு உடனடி விஜயம்

அட்டாளைச்சேனை வைத்தியசாலை குறைபாடு தொடர்பில் வெளியிடப்பட்ட ‘புதிது’ செய்திக்குப் பலன்: பிராந்திய பணிப்பாளர் களத்துக்கு உடனடி விஜயம் 0

🕔25.Jul 2024

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியம் – குளிரூட்டி இல்லாமல் இயங்குவதைச் சுட்டிக்காட்டி நேற்று (24) ‘புதிது’ செய்தித்தளம் செய்தி வெளியிட்டமையை அடுத்து, அங்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் வருகை தந்தனர். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சகீலா இஸ்ஸடீன் மற்றும் கல்முனை பிராந்திய

மேலும்...
ரணிலுக்கு ஆதரவு வழங்கியமைக்கு கிடைத்த பரிசு, பொதுஜன பெரமுனவை அவர் பிளவுபடுத்தியமைதான்: நாமல் ராஜபக்ஷ

ரணிலுக்கு ஆதரவு வழங்கியமைக்கு கிடைத்த பரிசு, பொதுஜன பெரமுனவை அவர் பிளவுபடுத்தியமைதான்: நாமல் ராஜபக்ஷ 0

🕔25.Jul 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – பொதுஜன பெரமுன கட்சியை பிளவுபடுத்தி விட்டதாக, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமங்கவை முழுமையாக ஆதரித்தமைக்காக, தங்கள் கட்சிக்கு வழங்கப்பட்ட பெரிய பரிசு, அவர் தமது கட்சியைப் பிளவுபடுத்தியமைதான் எனவும் அவர் கூறியுள்ளார். அரசாங்கத்தை அமைப்பதற்கு ரணில் விக்ரமசிங்கவை அழைக்க, 2022ஆம் ஆண்டு

மேலும்...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி நாளை வெளியிடப்படும்: ஆணைக்குழு அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி நாளை வெளியிடப்படும்: ஆணைக்குழு அறிவிப்பு 0

🕔25.Jul 2024

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் நாளை 26ஆம் திகதி வெளியிடப்படும் என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அறிவித்துள்ளார். ‘ஜனாதிபதி தேர்தல் 2024’ எனும் தலைப்பில் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ‘1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் சட்ட ஏற்பாடுகளுக்கமைய

மேலும்...
ஓய்வூதியதாரர்களுக்கு 3,000 ரூபாய் விசேட கொடுப்பனவு வழங்க தீர்மானம்

ஓய்வூதியதாரர்களுக்கு 3,000 ரூபாய் விசேட கொடுப்பனவு வழங்க தீர்மானம் 0

🕔24.Jul 2024

ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்தம் விசேட கொடுப்பனவாக 3000 ரூபாயை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்தக் கொடுப்பனவு செப்டம்பர் மாதம் தொடக்கம் வழங்கப்படுவதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு காணப்படும் வரை, இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும். நாட்டில் சுமார் 07 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்பான செய்தி: சம்பள முரண்பாடுகள் தொடர்பில் முன்மொழிவுகளை எதிர்வரும் 09ஆம்

மேலும்...
கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட கைத்துப்பாக்கி: கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு

கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட கைத்துப்பாக்கி: கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு 0

🕔24.Jul 2024

– பாறுக் ஷிஹான் – ரிவோல்வர் ரக கைத் துப்பாக்கியொன்று கண்டெடுக்கப்பட்டு, கல்முனை தலைமையக  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் குழாய் ஒன்றில் இட்டு, கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் – கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது. கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட – மாமாங்க பிள்ளையார் ஆலயத்தை அண்டிய கடற்கரை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் இதனைக் கண்டெடுத்த நிலையில், நேற்று

மேலும்...
மன்னிப்பு கேட்டு விட்டு தப்பிக்க முடியாது; இழப்பீடும் வழங்க வேண்டும்: கொவிட் கட்டாய தகனம் தொடர்பில் சஜீத் வலியுறுத்தல்

மன்னிப்பு கேட்டு விட்டு தப்பிக்க முடியாது; இழப்பீடும் வழங்க வேண்டும்: கொவிட் கட்டாய தகனம் தொடர்பில் சஜீத் வலியுறுத்தல் 0

🕔24.Jul 2024

கொரோனா பாதிப்பின் காரணமாக மரணித்தவர்களின் உடல்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்தமைக்காக மன்னிப்புக் கோருவதற்குரியஅமைச்சரவை முடிவை தான் வரவேற்பதாகத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கட்டாய தகனத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென நாடாளுமன்றில் வலியுறுத்தினார். “மன்னிப்பு கேட்டு தப்பிக்க முடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் குளிரூட்டி இல்லாத மருந்துக் களஞ்சியம்; பலமுறை அறிவித்தும் கணக்கெடுக்காத பிராந்தியப் பணிப்பாளர் காரியாயலம்

அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் குளிரூட்டி இல்லாத மருந்துக் களஞ்சியம்; பலமுறை அறிவித்தும் கணக்கெடுக்காத பிராந்தியப் பணிப்பாளர் காரியாயலம் 0

🕔24.Jul 2024

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் நீண்ட காலமாக குளிரூட்டி இல்லாத நிலையிலேயே, அங்கு மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. குளிரூட்டி இல்லாத இடத்தில் மருந்துகள் சேமிக்கப்படும் போது – அவை வீரியமிழக்கவும், பழுதடையவும் சாத்தியங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் புதிய கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில் – புதிய

மேலும்...
நேபாளத்தில் விமானம் விபத்து: 18 பேர் மரணம்; ஓட்டுநர் ஒருவர் மட்டும் உயிருடன் மீட்பு

நேபாளத்தில் விமானம் விபத்து: 18 பேர் மரணம்; ஓட்டுநர் ஒருவர் மட்டும் உயிருடன் மீட்பு 0

🕔24.Jul 2024

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து விமானமொன்று புறப்படும் வேளையில் விபத்துக்குள்ளான போது 18 பேர் உயிரிழந்தனர். திரிபுவன் விமான நிலையத்தில் இருந்து, பிரபல சுற்றுலா தளமான போகராவுக்கு செல்லும் சவுர்யா ஏர்லைன்ஸ் விமானத்தில் விபத்தின் போது 19 நபர்கள் இருந்துள்ளனர். பராமரிப்பு பணிகளுக்காக எடுத்துச் செல்லப்பட்ட விமானத்தில், சவுர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த 17 பேர்

மேலும்...
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்பட இடைக்காலத் தடை

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்பட இடைக்காலத் தடை 0

🕔24.Jul 2024

பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றுவதற்கு தேசபந்து தென்னகோனுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (24) இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை எதிர்த்து, பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் உட்பட பல தரப்பினர் 09 அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அவர்களின் மனுக்களில் பொலிஸ் மா அதிபராக

மேலும்...
கோட்டா ‘கேட்காத’ மன்னிப்பும், ரணில் ‘கேட்கும்’ மன்னிப்பும்: முஸ்லிம்களின் உணர்வுகளில் மூட்டப்படும் ‘தீ’

கோட்டா ‘கேட்காத’ மன்னிப்பும், ரணில் ‘கேட்கும்’ மன்னிப்பும்: முஸ்லிம்களின் உணர்வுகளில் மூட்டப்படும் ‘தீ’ 0

🕔24.Jul 2024

– மப்றூக் – உலகில் மிகவும் மகத்தானது மன்னிப்பு. தாம் செய்த தவறை அல்லது பிழையை உணர்ந்து – அதனால் பாதிக்கப்பட்டோரிடம் கேட்கும் மன்னிப்பு ‘அர்த்தங்கள்’ நிறைந்ததாகும் . ஆனால் மன்னிப்பை சிலர் ‘தந்திர மனதோடு’ பயன்படுத்துவதுமுண்டு. அவ்வாறான மன்னிப்பு வெறும் ‘வார்த்தையாக’ மட்டுமே இருக்கும். அவை உண்மையாகவும், உணர்வுபூர்வமாகவும் இருப்பதில்லை. இலங்கையில் கொரோனா தொற்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்