ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி நாளை வெளியிடப்படும்: ஆணைக்குழு அறிவிப்பு

🕔 July 25, 2024

னாதிபதித் தேர்தல் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் நாளை 26ஆம் திகதி வெளியிடப்படும் என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

‘ஜனாதிபதி தேர்தல் 2024’ எனும் தலைப்பில் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

‘1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் சட்ட ஏற்பாடுகளுக்கமைய – சனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான பிரகடனத்தை வெளியிடும் திகதியும், பெயர்குறித்த நியமனங்களை ஏற்கும் திகதியும் பற்றி அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை 2024 யூலை மாதம் 26 ஆம் திகதி வெளியிடுவதற்கு இன்றைய தினம் கூடிய தேர்தல் ஆணைக்குழு திரமானித்துள்ளது என்பதை இத்தால் அறிவிக்கின்றேன்’ என, அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ‘ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதியும். ஏனைய நியதிச்சட்ட ஏற்பாடுகளும் பற்றி – தனிப்பட்ட பலரும் பல திறத்தவர்களும் முன்வைக்கும் கருத்து வெளிப்பாடுகள் சம்பந்தமாக – தேர்தல்கள் ஆணைக்குழு எவ்வித பொறுப்பையும் ஏற்காது என்பது இத்தால் மேலும் அறிவிக்கப்படுகின்றது’ எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்