கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட கைத்துப்பாக்கி: கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு

🕔 July 24, 2024

– பாறுக் ஷிஹான் –

ரிவோல்வர் ரக கைத் துப்பாக்கியொன்று கண்டெடுக்கப்பட்டு, கல்முனை தலைமையக  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் குழாய் ஒன்றில் இட்டு, கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் – கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட – மாமாங்க பிள்ளையார் ஆலயத்தை அண்டிய கடற்கரை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் இதனைக் கண்டெடுத்த நிலையில், நேற்று (23) மாலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இரண்டு தோட்டாக்களுடன் கண்டெடுக்கப்பட்ட மேற்படி துப்பாக்கி, ஜேர்மனி நாட்டு தயாரிப்பு என பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட துப்பாக்கி தொடர்பில் எந்தவொரு சந்தேக நபரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக  பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்