நேபாளத்தில் விமானம் விபத்து: 18 பேர் மரணம்; ஓட்டுநர் ஒருவர் மட்டும் உயிருடன் மீட்பு

🕔 July 24, 2024

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து விமானமொன்று புறப்படும் வேளையில் விபத்துக்குள்ளான போது 18 பேர் உயிரிழந்தனர்.

திரிபுவன் விமான நிலையத்தில் இருந்து, பிரபல சுற்றுலா தளமான போகராவுக்கு செல்லும் சவுர்யா ஏர்லைன்ஸ் விமானத்தில் விபத்தின் போது 19 நபர்கள் இருந்துள்ளனர்.

பராமரிப்பு பணிகளுக்காக எடுத்துச் செல்லப்பட்ட விமானத்தில், சவுர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த 17 பேர் மற்றும் 02 விமானிகள் இருந்துள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கி 18 நபர்கள் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விமானியொருவர் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்