தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்பட இடைக்காலத் தடை

🕔 July 24, 2024

பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றுவதற்கு தேசபந்து தென்னகோனுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (24) இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை எதிர்த்து, பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் உட்பட பல தரப்பினர் 09 அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

அவர்களின் மனுக்களில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் கடமையாற்றுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்