ஜனாதிபதித் தேர்தல்: ரணில் விக்ரமசிங்க கட்டுப்பணம் செலுத்தினார்

🕔 July 26, 2024

னாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா – ரணில் விக்ரமசிங்க சார்பில் கட்டுப் பணத்தை கையளித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வைப்புத் தொகையை இன்று (26) காலை 8.30 மணி முதல் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்படுவதற்கு முந்தைய நாளான ஓகஸ்ட் 14ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வைப்புச் செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர் 50,000 ரூபாயினையும், வேறு ஏதேனும் அரசியல் கட்சியால் அல்லது வாக்காளர்களால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர் 75,000 ரூபாயையும் செலுத்த வேண்டும்..

ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடத்தப்படும் என்றும், வேட்புமனுக்கள் 2024 ஓகஸ்ட் 15 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்