Back to homepage

Tag "பொலிஸார்"

முச்சக்கர வண்டியில் பயணித்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

முச்சக்கர வண்டியில் பயணித்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலி 0

🕔28.Aug 2023

துப்பாக்கிச் சூட்டில் 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லம்பிட்டி – கிட்டம்பஹுவ பிரதேசத்தில் இன்று (28) பிற்பகல் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் இருவர் – கைத்துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த நபர் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளதாக

மேலும்...
போலி ஆவணங்கள் தயாரித்த கிராம சேவை உத்தியோகத்தர் கைது

போலி ஆவணங்கள் தயாரித்த கிராம சேவை உத்தியோகத்தர் கைது 0

🕔23.Aug 2023

போலி ஆவணங்களை தயாரித்ததாக கூறப்படும் கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவரை கண்டி பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கண்டியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் சுமார் 30 மாணவிகளை சேர்ப்பதற்காக, அவர் இந்த போலி ஆவணங்களைத் தயாரித்துள்ளார். கைது செய்யப்பட்டவர் தெய்யன்னவெல கிராம சேவையாளர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தராவார். அவர்

மேலும்...
ஏழரைக் கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

ஏழரைக் கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது 0

🕔6.Aug 2023

யாழ்ப்பாணம் – பொன்னாலியில் 75 மில்லியன் ரூபாய் (ஏழரைக் கோடி ரூபாய்) பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபரொருவரை கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று (05) கைது செய்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான வகையில் வீதியில் சென்ற லொறி ஒன்றை சோதனையிட்ட போது, அதிலிருந்து இந்த கஞ்சா மீட்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட வாகனத்தில் இருந்த 08 சாக்குகளில் சுமார் 227

மேலும்...
நிந்தவூர் பாடசாலையொன்றில் மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்கு முயன்ற ஆசிரியர் தலைமறைவு: சம்பவத்தை மறைக்க நிர்வாகம் முயற்சி

நிந்தவூர் பாடசாலையொன்றில் மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்கு முயன்ற ஆசிரியர் தலைமறைவு: சம்பவத்தை மறைக்க நிர்வாகம் முயற்சி 0

🕔3.Aug 2023

– பாறுக் ஷிஹான் – பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தலைமைறைவாகியுள்ளார். அம்பாறை மாவட்டம் – நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றில் கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதி உடற்கல்வி ஆசிரியரால் விளையாட்டு அறையில் வைத்து பாலியல்

மேலும்...
அடையாளம் தெரியாத கும்பல் வீட்டுக்குத் தீ வைத்ததில் ஒருவர் பலி; 09 பேர் வைத்தியசாலையில்

அடையாளம் தெரியாத கும்பல் வீட்டுக்குத் தீ வைத்ததில் ஒருவர் பலி; 09 பேர் வைத்தியசாலையில் 0

🕔23.Jul 2023

பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டுக்கு, அடையாளம் தெரியாத கும்பலொன்று தீ வைத்தமையினால், 21 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (23) அதிகாலை வவுனியா தோணிக்கல் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் ஓமந்தை பிரதேசத்தைச் சேர்ந்தவராவாவர். தீ விபத்தில் காயமடைந்தவர்களில்

மேலும்...
நீதிமன்றக் கூரை மீதேறி நபர் ஒருவர் ஆர்ப்பாட்டம்

நீதிமன்றக் கூரை மீதேறி நபர் ஒருவர் ஆர்ப்பாட்டம் 0

🕔18.Jul 2023

மெல்சிறிபுர பொலிஸாரால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி, ஒருவர் இன்று (18) காலை குருநாகல் நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் கூரையில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். சட்டவிரோத மதுபான வியாபாரம் தொடர்பில் மெல்சிறிபுர பொலிஸார் – தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறி 55 வயதுடைய நபர் கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
வைத்தியர்  மீது வைத்தியர் தாக்குதல்: காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி

வைத்தியர் மீது வைத்தியர் தாக்குதல்: காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔19.Jun 2023

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் மற்றுமொரு வைத்தியரால் தாக்கப்பட்டதில் தலையில் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த மருத்துவர், மருத்துவமனையின் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்க (GMOA) கிளையின் அலுவலகப் பொறுப்பாளர் ஆவார். நேற்று காலை தனது அலுவலகத்துக்கு வந்த வைத்தியர் ஒருவர் – தன்னை தாக்கியதாகவும் இதனால் காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்காக 5400 பொலிஸார் நியமனம்: அமைச்சர் தெரிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்காக 5400 பொலிஸார் நியமனம்: அமைச்சர் தெரிவிப்பு 0

🕔6.Jun 2023

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அமைச்சர்கள் அல்லாத நபர்களின் பாதுகாப்புக்காக சுமார் 5,400 பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பாக அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று (06) தெரிவித்துள்ளார். அறிக்கையை பரிசீலனை செய்த பின்னர் அத்தகைய நபர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பணியாளர்களின் எண்ணிக்கையை நீக்கவோ அல்லது குறைக்கவோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று

மேலும்...
யுவதி கடத்தப்பட்டு வன்புணர்வு: சந்தேக நபர்கள் போதைப்பொருள் பாவித்திருந்ததாக பாதிக்கப்பட்டவர் தெரிவிப்பு

யுவதி கடத்தப்பட்டு வன்புணர்வு: சந்தேக நபர்கள் போதைப்பொருள் பாவித்திருந்ததாக பாதிக்கப்பட்டவர் தெரிவிப்பு 0

🕔31.May 2023

கடுகண்ணாவை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய யுவதி ஒருவரை – நான்கு நபர்கள் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டியில் வந்த சந்தேகநபர்கள், ஹதரலியத்த புத்தர் சிலைக்கு அருகில் வைத்து சிறுமியை கடத்திச் சென்று – பொத்தபிட்டிய குருலு வெவாவுக்கு முன்பாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சந்தேகநபர் ஒருவர்

மேலும்...
பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் காயம்; நாய் பலி

பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் காயம்; நாய் பலி 0

🕔21.May 2023

கம்பளை – பன்விலதென்ன பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், 18 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், நாயொன்றும் உயிரிழந்துள்ளது. பொலிஸார் இன்று (21) வீடொன்றைச் சுற்றி வளைத்த போது, இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சட்டவிரோத நடத்தப்படும் மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை இன்று அதிகாலை பொலிஸார்ட சுற்றி வளைத்த போதே,

மேலும்...
அக்குரணை பள்ளிவாசல்களில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக, பொய் தகவல் வழங்கிய மௌலவி கைது

அக்குரணை பள்ளிவாசல்களில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக, பொய் தகவல் வழங்கிய மௌலவி கைது 0

🕔22.Apr 2023

அக்குரணையில் உள்ள பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக, அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கத்கத்துக்கு அழைத்து – பொய்யான தகவல் வழங்கிய சந்தேக நபரை ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். தவறான தகவல்களை வழங்கிய சந்தேக நபரின் நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 21 வயதுடைய மௌலவி ஒருவரையே – பொலிஸ் சைபர் குற்றத்தடுப்பு

மேலும்...
லஞ்சம் பெற முயன்ற பொலிஸார் இருவருக்கு விளக்க மறியல்

லஞ்சம் பெற முயன்ற பொலிஸார் இருவருக்கு விளக்க மறியல் 0

🕔13.Apr 2023

லஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது. பொலன்னறுவை அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றதாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்கு 09 ஆயிரம் ரூபா லஞ்சம் கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும்...
கண்ணீர் புகை தாக்குதலில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்ததாக சந்தேகம்: நாடாளுமன்றில் தெரிவிப்பு

கண்ணீர் புகை தாக்குதலில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்ததாக சந்தேகம்: நாடாளுமன்றில் தெரிவிப்பு 0

🕔9.Mar 2023

பொலிஸாரின் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலால் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சந்தேகிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களுடன் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை ஏற்பட்ட மோதலின் போது, பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பொலிஸாரின் கண்ணீர்ப்புகைப்

மேலும்...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் கண்டெடுப்பு: பொலிஸாரின் சந்தேகமும் வெளியானது

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் கண்டெடுப்பு: பொலிஸாரின் சந்தேகமும் வெளியானது 0

🕔7.Mar 2023

வவுனியா குட்ஷெட் வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் இன்று (07) மீட்கப்பட்டுள்ளன. 42 வயதுடைய நபரொருவர், அவரின் 36 வயதுடைய மனைவி மற்றும் 09 மற்றும் 03 வயதுடைய இரண்டு மகள்கள் ஆகியோரே உயிரிந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி கணவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு

மேலும்...
பொலிஸார் திட்டமிட்டு கதையொன்றைப் பரப்புகின்றனர்: பொரளை தேவாலய குண்டு விவகாரம் தொடர்பில், மல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

பொலிஸார் திட்டமிட்டு கதையொன்றைப் பரப்புகின்றனர்: பொரளை தேவாலய குண்டு விவகாரம் தொடர்பில், மல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு 0

🕔13.Jan 2022

பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னால், சதி முயற்சியொன்று உள்ளதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் சந்தேகம் வெளியிட்டுள்ளார். பொலிஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள விதத்தினை கடுமையாக சாடியுள்ள கர்தினால்; “அதிகாரிகள் உண்மையை தெரிவிப்பதற்கு பதில் கட்டுக்கதைகளை வெளியிடுகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார். “கைக்குண்டு மீட்கப்பட்ட தினத்தின் சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் முழுமையாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்