யுவதி கடத்தப்பட்டு வன்புணர்வு: சந்தேக நபர்கள் போதைப்பொருள் பாவித்திருந்ததாக பாதிக்கப்பட்டவர் தெரிவிப்பு

🕔 May 31, 2023

டுகண்ணாவை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய யுவதி ஒருவரை – நான்கு நபர்கள் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டியில் வந்த சந்தேகநபர்கள், ஹதரலியத்த புத்தர் சிலைக்கு அருகில் வைத்து சிறுமியை கடத்திச் சென்று – பொத்தபிட்டிய குருலு வெவாவுக்கு முன்பாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சந்தேகநபர் ஒருவர் தன்னை வன்புணர்ந்ததாகவும், மற்ற மூவரும் முச்சக்கர வண்டியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்கள் ஏதோவொரு போதைப்பொருளின் தாக்கத்தில் இருந்ததாக பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பெண் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடுகன்னாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்