முச்சக்கர வண்டியில் பயணித்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

🕔 August 28, 2023

துப்பாக்கிச் சூட்டில் 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லம்பிட்டி – கிட்டம்பஹுவ பிரதேசத்தில் இன்று (28) பிற்பகல் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் இருவர் – கைத்துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்