பொலிஸ் உத்தியோகத்தரின் கழுத்தை நெரித்து கொலை செய்த தேரர்: விசாரிக்க சென்ற இடத்தில் கொடூரம் 0
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவின் கழுத்தை நெரித்து, பௌத்த தேரர் ஒருவர் கொலை செய்துள்ளார். இரத்தினபுரி – கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே, விகாரையின் தேரரொருவரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். தேரரால் கழுத்து நெரிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட