17 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை; 03 பேருக்கு இன்று மரண தண்டனை
நபரொருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையினை அடுத்து, மூன்று பேருக்கு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
கொழும்பு நவகம்புர பகுதியில் 2001ஆம் ஆண்டு இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றது.
மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினைத் தொடர்ந்து, நபரொருவரை சந்தேக நபர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்.
நீண்ட காலமாக இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களு ஆராச்சி இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளார்.