ராஜித குழுவிலிருந்து 07 பேர் பின்வாங்கல்; மைத்திரி, மஹிந்த பின்னணியில் உள்ளதாக சந்தேகம் 0
– அஸ்ரப் ஏ. சமத் –அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோரோடு இணைந்து, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட, ஐ.ம.சு.முன்னணியின் 13 பிரமுகர்களில், 07 பேர் பின்வாங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.இதனால், அமைச்சர் ராஜிதவின் குழுவில், 06 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனா். ஐ.ம.சு.முன்னணியிலிருந்து அமைச்சர் ராஜிதவோடு இணைந்து சென்று,