மரண வீட்டில் மோதல்; பெண் உட்பட ஏழு பேர் காயம் 0
மரண வீடொன்றில் ஏற்பட்ட மோதலில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட ஏழு பேர் காயமடைந்தனர். மட்டக்களப்பு – ஆரயம்பதி பிரதேசத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மரணமடைந்த பெண் ஒருவரின் பிரேதம் வைக்கப்பட்டிருந்த வீட்டில் , மரணித்தவரின் மகன்கள் மற்றும் பேரப் பிள்ளைகளே இவ்வாறு மோதலில் ஈடுபட்டனர். குறித்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, ஒரு தரப்பினர் கூறியுள்ளனர்.