Back to homepage

Tag "துப்பாக்கிச் சூடு"

கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில், பொலிஸ் உத்தியோகத்தர் பலி: மாத்தறையில் சம்பவம்

கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில், பொலிஸ் உத்தியோகத்தர் பலி: மாத்தறையில் சம்பவம் 0

🕔22.Jun 2018

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் – மாத்தறை நகரத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியானார். மாத்தறை நகர பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையமொன்றில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது, பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது. இதரன்போது  துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,

மேலும்...
பிரித்தானிய பிரஜையும் மற்றுமொருவரும், துப்பாக்கிச் சூட்டில் காயம்

பிரித்தானிய பிரஜையும் மற்றுமொருவரும், துப்பாக்கிச் சூட்டில் காயம் 0

🕔5.Apr 2018

அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பிரித்தானிய பிரஜையொருவரும் மற்றுமொரு நபரும் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துருவெல்ல – கொஸ்கொட பகுதியில் மேற்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர், துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாகக் கூறப்படுகிறது. முகம்மட் இஸ்மாயில் (68 வயது) எனும்

மேலும்...
அரச வங்கியில் 50 லட்சம் கொள்ளை; துப்பாக்கி சூடு நடந்ததால் வாடிக்கையாளர் காயம்

அரச வங்கியில் 50 லட்சம் கொள்ளை; துப்பாக்கி சூடு நடந்ததால் வாடிக்கையாளர் காயம் 0

🕔5.Dec 2017

அரச வங்கியொன்றில் கொள்ளையிட்டவர்களில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த, வங்கி வாடிக்கையாளரொருவர் தங்கல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்கிழமை காலை 9.45 மணியளவில் இடம்பெற்றது. தங்கல்ல – குடாவெல்ல பகுதியிலுள்ள குறித்த வங்கிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கியை காட்டி மிரட்டி, அங்கிருந்து 50 லட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச்

மேலும்...
அரியாலையில் இளைஞரைச் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில், அதிரடிப்படையினர் இருவர் கைது

அரியாலையில் இளைஞரைச் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில், அதிரடிப்படையினர் இருவர் கைது 0

🕔3.Nov 2017

அரியாலையில் இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்றார்கள் எனும் சந்தேகத்தின் பேரில், விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த உப பரிசோதகர் ஒருவரும், கொன்ஸ்டபிள் ஒருவரும் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம் அதிரடிப்படை முகாமைச் சேர்ந்தவர்களாவர். மேற்படி அதிரடிப்படையினரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். உப பரிசோதகர் மல்லவராச்சி பிரதீப் நிசாந்த மற்றும் கொன்ஸ்டபிள் ரத்னாயக்க முதயன்சலாககே

மேலும்...
நீர்கொழும்பு துப்பாக்கிச் சண்டை: கைதானவர்களில் ஒருவர் கடற்படையிலிருந்து விலகியவர்

நீர்கொழும்பு துப்பாக்கிச் சண்டை: கைதானவர்களில் ஒருவர் கடற்படையிலிருந்து விலகியவர் 0

🕔13.Aug 2017

நீர்கொழும்பு – குரண பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடற்படையிலிருந்து விலகியவர் என நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட அதிரடி படையினருக்கும், வேனில் பயணித்த பாதாள உலகக் கோஸ்டி என சந்தேகிக்கப்படும் நபர்களுக்குமிடையில் நேற்று சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதன்போது, காயமடைந்த இரு சந்தேக நபர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும்...
நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த துப்பாக்கிச் சூடு;  இருவர் கைது

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த துப்பாக்கிச் சூடு; இருவர் கைது 0

🕔23.Jul 2017

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து நல்லூரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இளஞ்செழியனின் பாதுகாப்பு பொலிஸார் மீது நேற்று சனிக்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் போது காயமடைந்த, பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இளஞ்செழியன் தனது வாகனத்தில்

மேலும்...
நீதிமன்றம் சென்று திரும்பிய நபர், துப்பாக்கிச் சூட்டில் பலி

நீதிமன்றம் சென்று திரும்பிய நபர், துப்பாக்கிச் சூட்டில் பலி 0

🕔18.Jan 2017

நீதிமன்றத்துக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த நபர் ஒருவர், ஹோமாகம – பிட்டிபன பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் உயிரிந்துள்ளார். சனா என அழைக்கப்படும் சமிந்த பெரேரா எனும் 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரே, துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டதாகத் தெரிய

மேலும்...
முஸ்லிம் இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, மற்றொருவர் காயம்: அகப்பட்டார் சந்தேக நபர்

முஸ்லிம் இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, மற்றொருவர் காயம்: அகப்பட்டார் சந்தேக நபர் 0

🕔20.Nov 2016

முஸ்லிம்  இளைஞர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை கல்ஹின்னை அன்கும்புற பிரதேசத்தில் இடம்பெற்றது. சம்பவத்தில் காயமடைந்த மற்றொருவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி இளைஞர்கள் இருவரும் வீதியின் ஓரமாக நின்று கொண்டிருந்தபோது, காரில் வந்தவர்களால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்

மேலும்...
பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம்; உப பரிசோதகர் பலி: குருணாகலில் சம்பவம்

பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம்; உப பரிசோதகர் பலி: குருணாகலில் சம்பவம் 0

🕔16.Nov 2016

குருநாகல் – மாஸ்பொத பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு பொலிஸாரின் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பலியானார். மேலும், இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர். ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் வைத்து, மேற்படி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் பஸ் ஒன்றில் ஏறி தப்பிச் சென்ற குறித்த நபர்

மேலும்...
மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி, இருவர் ஆபத்தான நிலையில்

மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி, இருவர் ஆபத்தான நிலையில் 0

🕔23.Oct 2016

மட்டக்குளி – சமித்புர பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இனந்தெரியாத நபர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த ஆறு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், அவர்களில் நால்வர் உயிரிழந்ததாகவும், மற்றும் படுகாயமடைந்த இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. என்ன

மேலும்...
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமையால் இறந்துள்ளனர் என தெரிவிப்பு

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமையால் இறந்துள்ளனர் என தெரிவிப்பு 0

🕔21.Oct 2016

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் கொக்குவில் – குளப்பிட்டி சந்தியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் பலியானதாக கூறப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும், துப்பாக்கி சூட்டு காயங்களால் உயிரிழந்துள்ளனர் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரேத பரிசோதனையின்போது, இந்த உண்மை தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.   ஆனால் இந்த மாணவர் மீதான துப்பாக்கி சூட்டை பொலிஸார்  மேற்கொள்ளவில்லை என, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி 0

🕔3.Jul 2016

மாத்தறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறை – திக்வெல்ல நாவரஹேன பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் மீது, இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 48 வயதுடைய வில்சன் விக்கிரமரத்ன என்பவர் உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது ரதம்பல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும்...
நீதிமன்றின் முன்னால் துப்பாக்கிச் சூடு; நபர் பலி

நீதிமன்றின் முன்னால் துப்பாக்கிச் சூடு; நபர் பலி 0

🕔23.Jun 2016

மஹர நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், 35 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். மஹர நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவரும் ஹெரோயின் தொடர்பான வழக்கொன்றில் ஆஜராக வந்த வேளையே, மேற்படி நபர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த துப்பாக்கிதாரிகள், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். உயிரிழந்தவரின் சடலம்

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் மனைவி பலி, கணவர் காயம்; இன்று காலை சம்பவம்

துப்பாக்கிச் சூட்டில் மனைவி பலி, கணவர் காயம்; இன்று காலை சம்பவம் 0

🕔11.Mar 2016

அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 49 வயதுடைய பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளதோடு, அவரின் கணவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் மொனராகல மாவட்டத்தின் செவனகல – ஹபுறுகல பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இறந்தவரின் வீட்டினுள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். சம்வம் தொடர்பில் சந்தேச நபர்கள் எவரும் இதுவரை கைதாகவில்லை.

மேலும்...
கர்ப்பிணிப் பெண் மீது துப்பாக்கிச் சூடு; வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக சம்பவம்

கர்ப்பிணிப் பெண் மீது துப்பாக்கிச் சூடு; வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக சம்பவம் 0

🕔5.Mar 2016

கர்ப்பிணிப் பெண் ஒருவர் மீது வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் குறித்த பெண் காயமடைந்த நிலையில், தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு இடம்பெற்றபோது, மேற்படி பெண்ணுடன் வயோதிப பெண் ஒருவரும், ஒரு பிள்ளையும் இருந்துள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்