Back to homepage

Tag "விபத்து"

வேன் விபத்து

வேன் விபத்து 0

🕔5.May 2016

– க. கிஷாந்தன் –கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற வேன்,  ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் பீக் ரெஸ்ட் விடுதி பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை விபத்துக்குள்ளாகியது. இந்த நிலையில், வேனில் பயணித்தவர்கள் விபத்து நடைபெற்றமையினையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.குறித்த வேன், பீக் ரெஸ்ட் விடுதி பகுதியில் வீதியை விட்டு விலகி மதில் ஒன்றில் மோதியதில்

மேலும்...
பண்டாரவளை வாகன விபத்தில், பல்கலைக்கழக மாணவியர் 25 பேர் காயம்

பண்டாரவளை வாகன விபத்தில், பல்கலைக்கழக மாணவியர் 25 பேர் காயம் 0

🕔14.Feb 2016

சப்ரகமுவ பல்கலைக்கழகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியும், கனரக வாகனமொன்றும் மோதிக் கொண்டதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, ஆகக்குறைந்தது 27 பேர் காயமடைந்துள்ளனர். பண்டாரவளை – ஹப்புத்தளை வீதியில், பண்டாரவளை ஒத்தக்கடை ரயில் கடவைக்கு அருகில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களில் 25 பேர் பல்கலைக்கழக மாணவிகளாவர். கனரக வாகனத்துடன் பஸ் வண்டி மோதுண்டதையடுத்து, பஸ் வண்டி

மேலும்...
தைப்பொங்கல் தினத்தன்று விபத்தில் சிக்கிய சிறுவன், சிகிச்சை பலனின்றி மரணம்

தைப்பொங்கல் தினத்தன்று விபத்தில் சிக்கிய சிறுவன், சிகிச்சை பலனின்றி மரணம் 0

🕔16.Jan 2016

– க. கிஷாந்தன் – கோவிலுக்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டியினால் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 08 வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். ஹட்டன் போடைஸ் பிரதான வீதியின் டிக்கோயா பட்டல்கலை பகுதியில் நேற்று தைப்பொங்கல் தினம் இரவு மேற்படி விபத்து  இடம்பெற்றது. பட்டல்கலை தோட்ட

மேலும்...
கனரக வாகனம் – முச்சக்கர வண்டி விபத்து; படுகாயங்களுடன் மூவர் வைத்தியசாலையில்

கனரக வாகனம் – முச்சக்கர வண்டி விபத்து; படுகாயங்களுடன் மூவர் வைத்தியசாலையில் 0

🕔15.Dec 2015

– க. கிஷாந்தன் – ஹட்டன் செனன் பகுதியில், கனரக வாகனமும், முச்சக்கர வண்டியும் மோதியதில் படுகாயமடைந்த  மூவர், வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துச் சம்வம் இன்று செவ்வாய்கிழமை காலை நடைபெற்றது. புத்தளத்திலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சீமெந்து ஏற்றி சென்ற கனரக வாகனமும், தலவாக்கலை வட்டகொடை பகுதியிலிருந்து வட்டவளை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியும், ஹட்டன் – கொழும்பு பிரதான

மேலும்...
கண்ணாடி ஏற்றிவந்த லொறி குடைசாய்ந்ததில், உதவியாளர் படுகாயம்

கண்ணாடி ஏற்றிவந்த லொறி குடைசாய்ந்ததில், உதவியாளர் படுகாயம் 0

🕔27.Nov 2015

– க. கிஷாந்தன் – நுவரெலியா – பதுளை பிரதான வீதியிலுள்ள ஹக்கல தபால் நிலையத்திற்கு அருகாமையில் லொறியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த உதவியாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்தது. கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி கண்ணாடிகளை ஏற்றிச்சென்ற லொறியொன்றே இவ்வாறு குடைசாய்ந்தது. லொறியில் சாரதியுடன், உதவியாளர் ஒருவரும் பயணித்திருந்தார். விபத்தின்போது

மேலும்...
உக்ரைன் நாட்டு பிரஜை, மாத்தளையில் பலி

உக்ரைன் நாட்டு பிரஜை, மாத்தளையில் பலி 0

🕔17.Nov 2015

– க. கிஷாந்தன் – உக்ரைன் நாட்டுப் பிரஜையொருவர் – மாத்தளை தெனியாய அக்குரஸ்ஸ பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார். யூரி குட்சென்கோ (yurii kutsenko) எனும் பெயருடைய திருமணமாகாத 32 வயதான  இளைஞர் ஒருவரே விபத்தில் பலியாகியுள்ளார். தெனியாய – அகுரஸ்ஸ பிரதான வீதியின் பிட்டபெத்தர தென்னபிட்ட என்ற இடத்தில், இன்று முற்பகல் இந்த

மேலும்...
பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து; சாரதி உட்பட, நான்கு பேர் படுகாயம்

பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து; சாரதி உட்பட, நான்கு பேர் படுகாயம் 0

🕔17.Nov 2015

– க. கிஷாந்தன்-ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் படுங்காயத்திற்குள்ளாகியுள்ளனர். ஹட்டனிலிருந்து நோர்வூட் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி, ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில், டிக்கோயா வனராஜா பிரதேச பிரதான வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது. இதில், முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும், முச்சக்கரவண்டியின் சாரதியும் படுங்காயமடைந்த நிலையில் டிக்கோயா

மேலும்...
நேருக்கு நேர் பஸ்கள் மோதி, ஹட்டனில் விபத்து

நேருக்கு நேர் பஸ்கள் மோதி, ஹட்டனில் விபத்து 0

🕔9.Nov 2015

– க. கிஷாந்தன் – ஹட்டன் வூட்லேண்ட் பகுதியில் பஸ்கள் இரண்டு நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஒன்பது பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும், கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த தனியார் பஸ் ஒன்றும்,

மேலும்...
நூறடி பள்ளத்தில் பாய்ந்து, முச்சக்கரவண்டி விபத்து

நூறடி பள்ளத்தில் பாய்ந்து, முச்சக்கரவண்டி விபத்து 0

🕔20.Oct 2015

– க. கிஷாந்தன் – வட்டவளை கரோலினா பகுதியில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் முச்சக்கர வண்டியொன்று 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது. அவிசாவளையிலிருந்து ஹட்டன் வழியாக நுவரெலியா நோக்கி சென்ற மேற்படி முச்சக்கரவண்டி, ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.இதன்போது, முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி மற்றும் பெண்

மேலும்...
ஒலுவில் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து; காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி

ஒலுவில் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து; காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔3.Oct 2015

– எம்.ஐ.எம். நாளீர் – ஒலுவில் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இருவர் காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று – கல்முனை வீதியில், அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், வீதியின் குறுக்காக நின்ற – மாடு ஒன்றில் மோதியதையடுத்து, இந்த விபத்து நேர்ந்ததாக, சம்பவத்தினை

மேலும்...
மினாவில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 717 ஆக உயர்வு

மினாவில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 717 ஆக உயர்வு 0

🕔24.Sep 2015

புனித ஹஜ் கடமையின்போது,  ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சஊதி அரேபியாவின் மினாவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப்றாஹிம் நபியவர்கள் சைத்தான் மீது கல்லெறிந்த நிகழ்வை ஞாபகிக்கும் வகையில், ஹஜ் கடமையில் ஈடுபடுகின்றவர்கள் மினாவில் கல்லெறிவார்கள். இதனபோது, ஏற்பட்ட நெரிசலிலேயே மேற்படி உயிரிழப்பு இடம்பெற்றுள்ளன. இதில் 850க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தாகவும் அறிய

மேலும்...
மக்கா புனித ஹரம் பள்ளிவாசல் விபத்தில், இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை; அமைச்சர் ஹலீம் தெரிவிப்பு

மக்கா புனித ஹரம் பள்ளிவாசல் விபத்தில், இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை; அமைச்சர் ஹலீம் தெரிவிப்பு 0

🕔12.Sep 2015

– அஷ்ரப் ஏ. சமத் –சவூதி அரேபியாவின் மக்கா நகரிலுள்ள புனித ஹரம் பள்ளிவாசலில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட  விபத்தில், இலங்கையிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்றவர்களுக்கு எதுவித ஆபத்துக்களும் ஏற்படவில்லை என்று முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ அப்துல் ஹலீம்  தெரிவித்தார்.இன்று சனிக்கிழமை காலை, அமைச்சரின் கொழும்பு  மாதிவெல இல்லத்தில் நடத்திய ஊடகவியலாளா் சந்திப்பிலேயே, அவர்

மேலும்...
பதற வைக்கும் விபத்துக்கள்!

பதற வைக்கும் விபத்துக்கள்! 0

🕔5.Jul 2015

கொழும்பு பிரதேசத்தில், குறித்த சில காலப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களின் வீடியோ பதிவுகள் இவையாகும். பொலிஸாரின் சிசிரிவி (CCTV) கமராவில் பதிவான விபத்துக் காட்சிகள், இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. இந்தக் காட்சிகளைக் காண்பதனூடாக – விபத்துக்கள் நடைபெறுவதற்கான காரணங்களை நாம் விளங்கிக் கொள்வதோடு, விபத்துக்களை முடிந்தவரை எவ்வாறு தவிர்த்துக் கொள்ள முயற்சிக்கலாம் என்பதை ஓரளவாயினும் புரிந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்