ஜனாதிபதியாக மீண்டும் ஒரு தடவை பதவி வகிக்கும் நம்பிக்கை உள்ளதாக, மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு 0
இலங்கை ஜனாதிபதியாக மீண்டுமொரு தடவை பதவி வகிக்கும் நம்பிக்கையுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்கு பின்னர், வெளிநாடுகளுடன் நல்லுறவைப் பேணி, நாட்டுக்கு நன்மை பயக்கும் பல உடன்படிக்கைகளை மேற்கொண்டு, ‘முழு உலகையும் வெற்றிகொள்ளும்’ ஒரே நிர்வாகமாவும் தமது நல்லாட்சி அரசாங்கமே இருந்ததாக, தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அவர் கூறினார்.