ஜனாதிபதியாக மீண்டும் ஒரு தடவை பதவி வகிக்கும் நம்பிக்கை உள்ளதாக, மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

🕔 August 29, 2023

இலங்கை ஜனாதிபதியாக மீண்டுமொரு தடவை பதவி வகிக்கும் நம்பிக்கையுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்கு பின்னர், வெளிநாடுகளுடன் நல்லுறவைப் பேணி, நாட்டுக்கு நன்மை பயக்கும் பல உடன்படிக்கைகளை மேற்கொண்டு, ‘முழு உலகையும் வெற்றிகொள்ளும்’ ஒரே நிர்வாகமாவும் தமது நல்லாட்சி அரசாங்கமே இருந்ததாக, தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அவர் கூறினார்.

“தற்போது தொழிலதிபர்கள் மகிழ்ச்சியாக இல்லை, அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக இல்லை. மீனவர்களோ, பொதுமக்களோ மகிழ்ச்சியாக இல்லை” எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

“இப்போதெல்லாம், பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் அச்சுறுத்தல் மிகவும் தீவிரமாக உள்ளது. இந்தப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் பயனுள்ள நடவடிக்கைகள் தேவை என்பதை நாங்கள் காண்கிறோம். நாம் அதை செய்ய முடியும். ஒரு கட்சி என்ற ரீதியில் அவற்றுக்கான தீர்வுகள் எங்களிடம் உள்ளன” எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் நாடாளுமுன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன மேலும் கூறினார்.

“ஒருமுறை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் என்ற வகையில், முந்தைய அனுபவங்களுடன் மீண்டும் பதவி வகிப்பதற்கு எனக்கு எந்த சிரமமும் இல்லை” எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்