பேரூந்துகள் நேருக்கு நேர் மோதியதில், மாணவர்கள் உட்பட 23 பேர் காயம்

🕔 May 3, 2024

பாறுக் ஷிஹான்

ரண்டு பேரூந்துகள்  மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் பலர் காயமடைந்துள்ள நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அக்கரைப்பற்று – அம்பாறை வீதியில், அம்பாறை – கல்ஓயா பாலத்துக்கு அருகில் இன்று (03)  பிற்பகல்  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பேருந்து மற்றும் பாடசாலை சேவை பேருந்து ஆகியவை நேருக்கு நேர்  மோதி  விபத்திற்குள்ளாகின.

இந்த விபத்தில் மாணவர்கள் உட்பட 23 பேர் காயமடைந்துள்ள நிலையில் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக, அம்பாறை பொலிஸார் கூறினர்.

விபத்தில் காயமடைந்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பாடசாலை மாணவர்களும் உள்ளனர் என, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்