முன்னாள் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவை வெளியேற்றுமாறு நீதிமன்று உத்தரவு

🕔 August 29, 2023

முன்னாள் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன – சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து அவரை வெளியேற்றுமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க நேற்று (28) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின்னரும் குற்றம் சாட்டப்பட்டவர் உத்தியோகபூர்வ இல்லத்தில் தொடர்ந்தும் தங்கியுள்ளதாக, அமைச்சின் செயலாளர் நீதிமன்றில் தெரிவித்ததோடு, அதனைக் காலி செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரியுள்ளார்.

உண்மைகளை உறுதிப்படுத்திய நீதவான், அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினரை வெளியேற்றுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்