போதைப் பொருளுடன் தொடர்புபட்ட குழுக்களுக்கிடையில் மோதல்; மூவர் காயம்: கல்முனையில் சம்பவம் 0
– பாறுக் ஷிஹான் – போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்த நிலையில், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய தபாலக வீதியில் உள்ள ஆடம்பர வீடு ஒன்றில் இச்சம்பவம் வியாழக்கிழமை (3) இரவு 11 மணியளவில்