நீர் கட்டணம் நாளை முதல் 50 வீதம் வரை அதிகரிக்கப்படுகிறது

🕔 August 2, 2023

நீர் கட்டணங்கள் நாளை ஓகஸ்ட் (03) முதல் திருத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்க்கட்டணங்கள் சுமார் 30% முதல் 50% வரை அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தபோதிலும், கட்டண திருத்தத்தினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் பாதிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்