தலைப்புச் செய்திகள்

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு: பிரதிவாதிகள் இன்று வாதத்தை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்

ஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உட்பட, 23,000-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளைக் கொண்ட ஒரு வழக்கில், பிரதிவாதிகள் இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்னால், தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​பிரதிவாதிகளான ஜைனுல் அப்தீன் முகமது ஜெசீம், முகமது முஸ்தபா முகமது ரிஸ்வான் மற்றும் மீரா ஜாஹிர் முகமது நஃப்லி ஆகியோர் குற்றவாளிக் கூண்டிலிருந்து தங்கள் வாக்குமூலங்களை வழங்கினர்.

இவ்வழக்கில் மொத்தம் 24 பிரதிவாதிகள் பெயரிடப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரதிவாதிகள் தங்கள் தரப்பு வாதங்களை தொடர்ந்து முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.