சினொபெக் நிறுவனத்துக்கான எரிபொருள், கப்பலில் இருந்து இறக்கும் நடவடிக்கை ஆரம்பம்

🕔 August 1, 2023

லங்கையின் எரிபொருள் விநியோக சந்தையில் பிரவேசித்துள்ள, சீனாவின் சினோபெக் நிறுவனம், முதலாவது எரிபொருள் கப்பலில் இருந்து, எரிபொருளை இறக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளது.

இதன் இரண்டாவது எரிபொருள் கப்பல் நாளை (02) வந்து சேரும் என்று அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் புதிய சில்லறை விற்பனையாளர்கள் – சந்தையில் நுழைவது பெட்ரோலியப் பொருட்களுக்கான அந்நியச் செலாவணி தேவைகளை எளிதாக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்