ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தகவல்கள் கிடைத்தும் பூஜித் ஜயசுந்தர கடமையை செய்ய தவறினார்: சட்ட மா அதிபர் திணைக்களம்

🕔 August 3, 2023

ஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் போதியளவு தகவல்கள் கிடைத்திருந்தும் அனைத் தடுக்க தவறியமை தொடர்பில் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தமது கடமையை செய்யத் தவறியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம், உயர்நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

குறித்த குற்றச்சாட்டுக்களில் பூஜித் ஜயசுந்தரவை குற்றமற்றவராக கருதி, கொழும்பு மேல் நீதிமன்றின் மூவரங்கிய நீதிபதிகள் குழாம் வழங்கிய தீர்ப்பை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, சட்டமா அதிபரினால் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு விசாரணைகளுக்காக இன்று (03) அழைக்கப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவான இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனான்டோவும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் குற்றமற்றவர்களாக அறிவிக்கப்பட்டு – கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டமை முறையற்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்