அஸ்வெசும பயனாளிகள் 08 லட்சம் பேருக்கு நாளை பணம் செலுத்தப்படுகிறது

🕔 August 27, 2023

‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகள் நாளை திங்கட்கிழமை (28) வங்கிகளுக்கு செலுத்தப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்ட 1.5 மில்லியன் பயனாளிகளில், தகவல் சரியாக உறுதிப்படுத்தப்பட்ட 0.8 மில்லியன் பயனாளிகளுக்கு பணம் வழங்கப்படும் என அமைச்சர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

தகவல்களை உடனடியாக சரிபார்த்த பிறகு, மீதமுள்ள பயனாளிகளுக்கு பணம் வழங்கப்படும், எஎனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பான கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது நிறைவடைந்தவுடன் அனைத்து பயனாளிகளுக்கும் பணம் செலுத்தப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, பொய்யான தகவல்களை வழங்கி நன்மைகளைப் பெற்ற பயனாளிகள் இருப்பின், அதனைச் சரிபார்த்ததன் பின்னர், நலன்புரிப் பலன்கள் சபையால் வழங்கப்பட்ட பணத்தை மீளப் பெற்று சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

‘தகுதியுள்ள எந்தவொரு பிரஜையும் தவறவிடப்படவிலலை என்பதை அரசாங்கம் உறுதி செய்யும்’ எனவும் ராஜாங்க அமைச்சர் ஷெஹன் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்