Back to homepage

மேல் மாகாணம்

புதிய அமைச்சர்கள் 09 பேர் சத்தியப் பிரமாணம்; தமிழர், முஸ்லிம் எவருமில்லை

புதிய அமைச்சர்கள் 09 பேர் சத்தியப் பிரமாணம்; தமிழர், முஸ்லிம் எவருமில்லை 0

🕔22.May 2017

அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றமையினை அடுத்து, இன்று திங்கட்கிழமை 09 பேர் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இவர்களில் எவரும் தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் புதிய அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டோர் விபரம் வருமாறு; மங்கள சமரவீர – நிதி மற்றும் ஊடகத்துறை எஸ்.பி. திஸாநாயக்க – சமூகமேம்பாடு,

மேலும்...
வெள்ளவத்தையில் இடிந்து வீழ்ந்த கட்டடத்தின் உரிமையாளர் கைது

வெள்ளவத்தையில் இடிந்து வீழ்ந்த கட்டடத்தின் உரிமையாளர் கைது 0

🕔21.May 2017

வெள்ளவத்தையில் இடிந்து வீழ்ந்த 05 மாடி கட்டடத்தின் உரிமையாளரை நேற்று சனிக்கிழமை இரவு வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்தனர். கட்டட விரிவாக்க வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, குறித்த மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 02 பேர் பலியாகியதோடு, 21 பேர் காயமடைந்துள்ளனர். வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட 62 வயதுடைய மேற்படி கட்டடத்தின் உரிமையாளர் நேற்றிரவு,

மேலும்...
ஞானசார தொடர்பில் பொலிஸார் கபட நாடகமாடுகின்றனர்: பிரதமரிடம் அமைச்சர் றிசாட் விசனம்

ஞானசார தொடர்பில் பொலிஸார் கபட நாடகமாடுகின்றனர்: பிரதமரிடம் அமைச்சர் றிசாட் விசனம் 0

🕔21.May 2017

– சுஐப் எம் காசிம் – அல்லாஹ்வையும் முஸ்லிம்களையும் தொடர்ச்சியாக, மோசமாக கேவலப்படுத்திப் பேசி வரும் ஞானசார தேரர் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை பொலிஸ் நிலையத்துக்கு வந்த போது, அவருக்கெதிராக முறைப்பாடு இருந்தும், அவரைக் கைது செய்யாமல் விட்டு விட்டு நேற்று சனிக்கிழமை மாலை குருநாகல் பகுதியில் அவரை கைது செய்யவதாக ஏய்ப்புக் காட்டிய

மேலும்...
அமைச்சரவை மாற்றம்; புதிய பதவிகளைப் பெறுவோர் விபரம் இதுதான்

அமைச்சரவை மாற்றம்; புதிய பதவிகளைப் பெறுவோர் விபரம் இதுதான் 0

🕔20.May 2017

– அஹமட் – விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாகக் கூறப்படும் அமைச்சரவை மாற்றத்தின் போது, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்படவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளிவிவகார அமைச்சராக மங்கள பதவி வகிக்கின்றார். இதேவேளை, நிதியமைச்சராக தற்போது பணியாற்றும் ரவி கருணாநாயகவுக்கு, வெளிவிவகார அமைச்சு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஊடகத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் கயந்த

மேலும்...
தூதுவராகிறார் பாதுகாப்புச் செயலாளர்

தூதுவராகிறார் பாதுகாப்புச் செயலாளர் 0

🕔20.May 2017

பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகிறது.மேற்படி பதவிக்கு கருணாசேன ஹெட்டியாரச்சியை நியமிக்கும் பொருட்டு, ஜேர்மன் அரசாங்கத்திடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டார தகவல்கள் கூறுகின்றன. ஜேர்மன் நாட்டுக்கான இலங்கைத் தூதுவராக தற்போது கடமையாற்றும் கருணாதிலக அமுனுகம தனது பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. கருணாசேன ஹெட்டியாரச்சி கடந்த 2015ம் ஆண்டு தொடக்கம், பாதுகாப்பு

மேலும்...
முஸ்லிம்களுக்கு மூத்திரம் வரவில்லை என்றாலும், ஆட்சியாளர்கள் கவலைப்படுகிறார்கள்: ஞானசார தேரர் விசனம்

முஸ்லிம்களுக்கு மூத்திரம் வரவில்லை என்றாலும், ஆட்சியாளர்கள் கவலைப்படுகிறார்கள்: ஞானசார தேரர் விசனம் 0

🕔19.May 2017

– எஸ். ஹமீத் –“சிங்களவர்களுக்குப் பிரச்சினையென்றால் நீதி கிடைப்பதில்லை; ஆனால், முஸ்லிம் ஒருவருக்கு மூத்திரம் போகாவிட்டாலும் அதனைப் பற்றி ஆட்சியாளர்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள்” என்று, பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.ஞானசார தேரரின் இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை, அமைச்சர்களான றிசாட் பதியுதீன், பைசர் முஸ்தபா, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் மற்றும் ஆசாத்சாலி

மேலும்...
முஸ்லிம்களுக்கெதிரான இனவாத செயற்பாடு: ஜனாதிபதிக்கு கடிதம் எழுத, ஹக்கீம் உள்ளிட்டோர் தீர்மானம்

முஸ்லிம்களுக்கெதிரான இனவாத செயற்பாடு: ஜனாதிபதிக்கு கடிதம் எழுத, ஹக்கீம் உள்ளிட்டோர் தீர்மானம் 0

🕔19.May 2017

  – பிறவ்ஸ் –முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகளை தடுத்துநிறுத்துவதற்கான முன்னெடுப்புகளை தீவிரப்படுத்தும் நோக்கில், அமைச்சர்கள் மற்றும் நாடாளுன்ற உறுப்பினர்கள் மட்டத்திலான உயர்மட்டக் கலந்துடையாடலொன்று இன்று வெள்ளிக்கிழமை தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சில் நடைபெற்றது.அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்சந்திப்பில், முஸ்லிம் விரோத

மேலும்...
ஞானசாரருக்கு எதிராக றிசாட் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் பொலிஸ் மா அதிபரிடம் புகார்; கைது செய்யுமாறும் அழுத்தம்

ஞானசாரருக்கு எதிராக றிசாட் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் பொலிஸ் மா அதிபரிடம் புகார்; கைது செய்யுமாறும் அழுத்தம் 0

🕔18.May 2017

– சுஐப் எம் காசிம் – கேவலமான வார்த்தைகளினால், அல்லாஹ்வை திட்டித் தீர்த்ததன் மூலம், முஸ்லிம் மக்களின் மத உணர்வினை நோகடித்து வரும் ஞானசார தேரரை உடனடியாக கைதுசெய்ய வேண்டுமென, பொலிஸ் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழைமை மாலை முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன், சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவரும் அமைச்சரமான பைசர்

மேலும்...
வெசாக் பந்தல் வீழ்ந்ததில், 04 வாகனங்கள் சேதம்

வெசாக் பந்தல் வீழ்ந்ததில், 04 வாகனங்கள் சேதம் 0

🕔18.May 2017

கிரிபத்கொட நகர் பகுதியில் கட்டப்பட்டிருந்த வெசாக் தோரணமொன்று சரிந்து வீழ்ந்ததில் ஆகக் குறைந்தது நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாகவே, மேற்படி தோரணம் வீழ்ந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், இதனால் எவருக்கும் காயம் ஏற்பட்டவில்லை என அறிய முடிகிறது.

மேலும்...
டுப்ளிகேட் தலைவர்; பேஸ்புக் ரகளை

டுப்ளிகேட் தலைவர்; பேஸ்புக் ரகளை 0

🕔18.May 2017

– அஹமட் – நாட்டில் கவலைக்கிடமான பல்வேறு நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் போதும், நமது அரசியல் தலைவர்களை வைத்து, சமூக வலைத்தளச் செயற்பாட்டாளர்கள் செய்யும் நையாண்டித்தனங்கள் சிரிக்க வைக்கும் வகையிலானவை. மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் சீனா சென்றிருந்த நிலையில், பேஸ்புக்கில் அவரை வைத்து, படு ரகளை பண்ணி விட்டார்கள் நமது நெட்டிசன்கள். அவ்வாறான ரகளைகளில் இது,

மேலும்...
வெள்ளவத்தையில் 05 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பாரிய அனர்த்தம்

வெள்ளவத்தையில் 05 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பாரிய அனர்த்தம் 0

🕔18.May 2017

புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் 05 மாடிக் கட்டடமொன்று கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் இடிந்து வீழ்ந்ததில் காயமடைந்த பலர், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் 13 பேர் களுபோவில வைத்தியசாலையிலும், ​06பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்றும் அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், குறித்த கட்டத்தின்

மேலும்...
எடுக்கிறத விடவும், செலுத்துறது அதிகமாம்; அர்த்த ராத்திரியில் குடைபிடிக்கும் அரசியல்வாதி

எடுக்கிறத விடவும், செலுத்துறது அதிகமாம்; அர்த்த ராத்திரியில் குடைபிடிக்கும் அரசியல்வாதி 0

🕔18.May 2017

– எம்.ஐ. முபாறக் –வெறுங்கையுடன் வந்து கோடி கோடியாகப் பணம் சம்பாதிப்பதற்கு இலகுவான வழி அரசியல்தான். சிலர் பணக்கார்களாக அரசியலுக்குள் நுழைந்து செல்வத்தை மேலும் பெருக்கிக்கொள்கின்றனர். சிலர் வெறுங்கையுடன் வந்து கோடிஸ்வரராகின்றனர்.அவ்வாறு ஓரளவு பணக்காரராக அரசியலுக்குள் நுழைந்தவர்தான் முன்னாள் அமைச்சரும் தற்போதைய மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகே.19 வயதில் நிதி நிறுவனம் ஒன்றில் விற்பனை

மேலும்...
பிரித்தானிய தூதரகத்தில் பறக்கும் ஓரினச் சேர்க்கை கொடி: நாமல் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்

பிரித்தானிய தூதரகத்தில் பறக்கும் ஓரினச் சேர்க்கை கொடி: நாமல் வெளியிடும் அதிர்ச்சித் தகவல் 0

🕔18.May 2017

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் கிடைத்துள்ளதாக  அரசாங்கம் கூறி பெருமைப்பட்டுக் கொண்டுள்ள இந்த தருணத்தில், இலங்கையிலுள்ள பிரித்தானியத் தூதரகத்தில் ஓரினசேர்க்கை உரிமைக்கான கொடி ஏற்றப்பட்டுள்ளமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவருடைய ஊடக பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;“இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் கிடைத்துள்ளதாக  அரசாங்கம் கூறி பெருமைப்பட்டுக் கொண்டுள்ள இந்த தருணத்தில், கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில்,   அந்த நாட்டு தேசியக்கொடிக்கு அருகில், ஓரின சேர்க்கையாளர்கள் கொடியேற்றப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் இலங்கையில் ஓரினசேர்க்கை திருமணத்தை சட்டபூர்வமாக்கும் பல திட்டங்களுக்கு பிரித்தானிய தூதரககம் உதவியுள்ளதாக தகவல் உள்ளது.இந்த நிலையில், ஓரினச்சேர்க்கை கொடி ஏற்பட்டமை தொடர்பில் பிரித்தானிய தூதுரகத்தினால் டுவிட்டர் பதிவொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.‘மனித உரிமைகள் உலகளாவியது. சகிப்புத்தன்மை மற்றும்

மேலும்...
மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விசேட குழு

மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விசேட குழு 0

🕔17.May 2017

மன்னார் மாவட்டத்தில் போரால் இடம்பெயர்ந்தோர் மற்றும் அப் பிரதேசத்தில் மீளக் குடியேற்றப்பட்டுள்ளோரின் பிரச்சினைகளைத் தீர்பதற்காக, ஜனாதிபதியின் ஆலோசனைக்கு இணங்க, விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. மன்னார் மாவட்டத்தில் போரால் இடம்பெயர்ந்தோர் மற்றும் அப் பிரதேசத்தில் மீளக் குடியேற்றப்பட்டுள்ளோரின் பிரச்சினைகளைஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபேகோன் தலைமையில் நேற்று செவ்வாய்கிழமை  ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே, சம்பந்தப்பட்டவர்களின் பிரச்சினைகளைத்

மேலும்...
10 மில்லியன் பானையாளர்களுக்கு, 3.8 மில்லியன் எல்.ஈ.டீ. மின் குமிழ்களை வழங்க, அமைச்சரவை அங்கீகாரம்

10 மில்லியன் பானையாளர்களுக்கு, 3.8 மில்லியன் எல்.ஈ.டீ. மின் குமிழ்களை வழங்க, அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔17.May 2017

குறைந்த வருமானமுடைய 3.8 மில்லியன் மின் பாவனையாளர்களுக்கு, 10 மில்லியன் எல்.ஈ.டீ (LED) மின் குமிழ்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று செவ்வாய்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே, அமைச்சர் இதனைக் கூறினார். நாட்டிலுள்ள 3.8 மில்லியன் மின் பாவனையாளர்கள், எல்.ஈ.டீ (LED) மின் குமிழ்களை விடவும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்