வெள்ளவத்தையில் இடிந்து வீழ்ந்த கட்டடத்தின் உரிமையாளர் கைது
வெள்ளவத்தையில் இடிந்து வீழ்ந்த 05 மாடி கட்டடத்தின் உரிமையாளரை நேற்று சனிக்கிழமை இரவு வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்தனர்.
கட்டட விரிவாக்க வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, குறித்த மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 02 பேர் பலியாகியதோடு, 21 பேர் காயமடைந்துள்ளனர்.
வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட 62 வயதுடைய மேற்படி கட்டடத்தின் உரிமையாளர் நேற்றிரவு, வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதன்போதே அவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த வியாழக்கிழமை மேற்படி கட்டடம் இடிந்து வீழ்ந்தது.
குறித்த கட்டடத்தின் உரிமையாளர் முஸ்லிம் என அறிய முடிகிறது.