வெசாக் பந்தல் வீழ்ந்ததில், 04 வாகனங்கள் சேதம்
கிரிபத்கொட நகர் பகுதியில் கட்டப்பட்டிருந்த வெசாக் தோரணமொன்று சரிந்து வீழ்ந்ததில் ஆகக் குறைந்தது நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாகவே, மேற்படி தோரணம் வீழ்ந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், இதனால் எவருக்கும் காயம் ஏற்பட்டவில்லை என அறிய முடிகிறது.