முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்
முஜிபுர் ரஹ்மான் இன்று (10) நாடாளுமன்ற உறுப்பினராக, இன்று (10) சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே, நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் மூலம் வெற்றிடமான இடத்துக்கு, முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டார்.
டயானா கமகே – நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கத் தகுதியற்றவர் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வறிதானது.
டயானா கமகே பிரித்தானிய பிரஜை என நிரூபிக்கப்பட்டமையை அடுத்து, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
தொடர்பான செய்தி: முஜிபுர் ரஹ்மான் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினரானார்: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு