முஜிபுர் ரஹ்மான் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினரானார்: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

🕔 May 9, 2024

க்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார் என – வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே, பிரித்தானியப் பிரஜை என்பதால், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என, உச்ச நீதிமன்றம் நேற்று (08) அறிவித்தது. இதனால் அவர் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்தார்.

இதனையடுத்து ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு, முஜிபுர் ரஹ்மானை நியமிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கஐக்கிய மக்கள் சக்தி பரிந்துரைத்தது.

கடந்த பொதுத் தேர்தலில் – கொழும்பு மாவட்டத்திலிருந்து ஐக்கிய மக்கள் சக்தி மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான முஜிபுர் ரஹ்மான், கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்