மூன்று கோயில்களில் கொள்ளை; சி.சி.ரி.வி.யில் திருடன் சிக்கினான் 0
– க. கிஷாந்தன் – டிக்கோயா பகுதியிலுள்ள ஆலயங்கள் சிலவற்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கோயிலொன்றில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமராவில், திருடியவரின் உருவம் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். டிக்கோயா அம்மன் ஆலயம், வனராஜா மேல்பிரிவு மருதவீரன் ஆலயம் மற்றும் வனாராஜா விநாயகர் ஆலயம் ஆகியவற்றில்