Back to homepage

பிரதான செய்திகள்

கழிவுகளால் நிறையும் வடிகான்கள்; அட்டாளைச்சேனை பிரதேச சபை அசமந்தம்

கழிவுகளால் நிறையும் வடிகான்கள்; அட்டாளைச்சேனை பிரதேச சபை அசமந்தம் 0

🕔11.Aug 2017

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதான வீதியோரங்களிலுள்ள வடிகான்களினுள் கழிவுப் பொருட்களும், குப்பைகளும் அதிகமாகக் காணப்படுகின்ற போதிலும், அதனை அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என, மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அட்டாளைச்சேனையில் மக்கள் வங்கிக் கிளை அமைந்திருக்கும் இடத்துக்கு முன்னாலுள்ள வடிகான்களினுள் கழிவுப் பொருள்கள் காணப்படுவதோடு , நீரும் தேங்கியுள்ளமையினால், நுளம்புகள் பெருகும் அபாயமும்

மேலும்...
எத்தனை அம்புகள் எறிந்தாலும், சமூகப் பணியைத் தொடர்வேன்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை

எத்தனை அம்புகள் எறிந்தாலும், சமூகப் பணியைத் தொடர்வேன்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை 0

🕔11.Aug 2017

எத்தனை அம்புகள் என்னை நோக்கி எறிந்தாலும், அத்தனையையும் தாங்கிக் கொண்டு சமூகப் பணிகளை முன்னெடுத்துச்செல்வேன் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் மறிச்சிக்கட்டி ஜாசிம் சிட்டி அல்ஜாசிம் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தின் புதிய ஆசிரியர் விடுதிக் கட்டிடத் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்

மேலும்...
வெளி விவகார அமைச்சராகிறார் திலக் மாரப்பன; ரணில் – மைத்திரி உடன்பாடு

வெளி விவகார அமைச்சராகிறார் திலக் மாரப்பன; ரணில் – மைத்திரி உடன்பாடு 0

🕔11.Aug 2017

வெளி விவகார அமைச்சராக, விசேட அபிவிருத்தித் திட்ட அமைச்சர் திலக் மாரப்பனவை நியமிப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது. ரவி கருணாநாயக்க ராஜிநாமா செய்தமையினால், அவரின் இடத்துக்கு மாரப்பன நியமிக்கப்படவுள்ளார். மாரப்பனவை வெளிவிவகார அமைச்சராக நியமிப்பது தொடர்பில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரேஷ்ட சட்டத்தரணியான திலக் மாரப்பன, முன்னாள்

மேலும்...
மூன்று மாதங்களில் அமைச்சுப் பதவி வழங்கப்படும்; வாக்குறுதி பெற்ற பிறகுதான், ரவி ராஜிநாமா செய்தார்

மூன்று மாதங்களில் அமைச்சுப் பதவி வழங்கப்படும்; வாக்குறுதி பெற்ற பிறகுதான், ரவி ராஜிநாமா செய்தார் 0

🕔10.Aug 2017

மூன்று மாதங்களில் அமைச்சு பதவியை வழங்கப்படும் என்கிற வாக்குறுதியைப் பெற்றுக் கொண்ட பின்னர்தான், ரவி கருணாநாயக்க தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்தார். ரவி கருணாநாயக்கவின் ராஜினாமா தொடர்பில் இன்று வியாழக்கியழமை மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துவெளியிடும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

மேலும்...
அடித்துப் பழக்கப்பட்ட எருதுகளில்லை நாம்; 20ஆவது திருத்தத்தை எதிர்க்கத் திரளுமாறு, பசீர் சேகுதாவூத் அழைப்பு

அடித்துப் பழக்கப்பட்ட எருதுகளில்லை நாம்; 20ஆவது திருத்தத்தை எதிர்க்கத் திரளுமாறு, பசீர் சேகுதாவூத் அழைப்பு 0

🕔10.Aug 2017

– முன்ஸிப் அஹமட் –அரசியலமைப்பில் கொண்டுவரப்படவுள்ள இருபதாவது திருத்தச் சட்டமூலத்தை உள்ளும் புறமும் எதிர்க்கத் தயாராகுமாறு, தூய முஸ்லிம் காங்கிரசின் பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் அழைப்பு விடுத்துள்ளார். மேற்படி 20ஆவது திருத்தச் சட்ட மூலமானது, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம், சிறுபான்மையினருக்குக் கிடைத்த அற்ப அதிகாரத்தையும் அபகரிக்கும் திட்டமாகும் எனத் தெரிவித்துள்ள பசீர்

மேலும்...
ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாது: சபாநாயகர் அறிவிப்பு

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாது: சபாநாயகர் அறிவிப்பு 0

🕔10.Aug 2017

ரவி கருணாநாயக்க, அவர் வகித்த அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்துள்ளமையினால், அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையினை, நாடாளுமன்றில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று வியாழக்கிழமை சபையில் அறிவித்தார். இருந்தபோதும், ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தினை இன்றைய தினம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதாக, நேற்று முன்தினம் நாடாளுமன்றில் சபாநாயகர் அறிவித்திருந்தார்.

மேலும்...
விடுவித்ததாக கூறும் காணிகள், மக்களுக்கு கிடைக்கவில்லை: முல்லிக்குளம் மக்கள், அமைச்சர் றிசாத்திடம் முறையீடு

விடுவித்ததாக கூறும் காணிகள், மக்களுக்கு கிடைக்கவில்லை: முல்லிக்குளம் மக்கள், அமைச்சர் றிசாத்திடம் முறையீடு 0

🕔10.Aug 2017

– சுஐப். எம். காசிம் – கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மன்னார் முள்ளிக்குள மக்களின் பூர்வீகக் கிராமம் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும், இன்னும் அந்த மக்களுக்கு உரித்துடைய காணிகள் வழங்கப்படுவதில் இழுத்தடிப்பு நடைபெறுவதாக முள்ளிக்குள கிராம மக்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் முறையிட்டுள்ளனர். அகில இலங்கை

மேலும்...
பெருமையுடன் பதவி விலகுகிறேன்: நாடாளுமன்றில் ரவி

பெருமையுடன் பதவி விலகுகிறேன்: நாடாளுமன்றில் ரவி 0

🕔10.Aug 2017

வெளிவிவகார அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்வதாக, ரவி கருணாநாயக்க இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் அறிவித்தார். கவலையுடனோ, அழுத்தங்களின் பேரிலோ இவ்வாறு – தான் ராஜிநாமா செய்யவில்லை என்றும், பெருமையுடன் இதனைச் செய்வதாகவும் அவர் கூறினார். நாடாளுமன்றில் விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டு உரையாற்றிய போதே, மேற்கண்ட விடயங்களை அவர் கூறினார். தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்,

மேலும்...
முகம் மூடிக் கொண்டு, பரீட்சை எழுதத் தடை

முகம் மூடிக் கொண்டு, பரீட்சை எழுதத் தடை 0

🕔10.Aug 2017

முகத்தை மூடி ஆடை அணிந்து கொண்டு, பரீட்சை எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, முகத்தை மூடிக்கொள்ளும் பெண் பரீட்சார்த்திகள்,  சிறிய தொலைபேசிகள் மற்றும் தொழிநுட்ப கருவிகளை மறைத்து வைத்துக் கொண்டு, பரீட்சை வினாக்களுக்கான விடைகளை கேட்டு எழுதியுள்ளதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன என்று, கல்வி அமைச்சர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும்...
அமைச்சரவைக் கூட்டத்தில் ரவியை காப்பாற்ற களமிறங்கினார் ராஜித; பதில் கொடுத்தார் ஜனாதிபதி

அமைச்சரவைக் கூட்டத்தில் ரவியை காப்பாற்ற களமிறங்கினார் ராஜித; பதில் கொடுத்தார் ஜனாதிபதி 0

🕔10.Aug 2017

பிணை முறி விவகாரத்தில் ரவி கருணாநாயக்கவை பாதுகாக்கும் வகையில், நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ராஜித சேனாரத்ன உட்பட, ஐ.தே.கட்சியின் அமைச்சர்கள் பலர் பேசினார்கள் என தெரியவருகிறது. ரவி கருணாநாயக்க தொடர்பில் இதன்போது பேசிய அமைச்சர ராஜித சேனாரத்ன; “பிணை முறை விவகாரம் தொடர்பில் ரவி கருணாநாயக்கவை விசாரணை செய்வதற்கு எதுவும் இல்லை” என

மேலும்...
ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து, சு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பர்

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து, சு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பர் 0

🕔10.Aug 2017

ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சார்பாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பர் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பின்னர், இது தொடர்பில் பிரதமரிடம் கூறப்பட்டுள்ளது. பிணை முறி விவகாரம் தொடர்பில் ரவி கருணாநாயக்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டே, இந்த முடிவு

மேலும்...
இலங்கையின் எடை கூடிய குழந்தை; பலப்பிட்டியவில் பிறந்தது

இலங்கையின் எடை கூடிய குழந்தை; பலப்பிட்டியவில் பிறந்தது 0

🕔9.Aug 2017

அதிக எடையுடைய குழந்தையொன்று பலப்பிட்டிய பிரதேசத்தில் பிறந்துள்ளது. இந்தக் குழுந்தை பிறக்கும் போது அதன் எடை 13.1 பவுன்ட் (5.94 கிலோ கிராம்) ஆகும். இலங்கையில் இதுவரை பிறந்த குழந்தைகளில் அதிக எடையுடைய குழுந்தை இதுதான் என பதிவாகியுள்ளது. அதேவேளை, உலகில் பிறந்த அதிக எடையுடைய 11 குழுந்தைகளில் இந்தக் குழுந்தையும் ஒன்றாகும் எனவும், கின்னஸ்

மேலும்...
கை விடப்பட்டுள்ள சாய்ந்தமருது தோணா; கணக்கில் எடுப்பாரா, அமைச்சர் ஹக்கீம்

கை விடப்பட்டுள்ள சாய்ந்தமருது தோணா; கணக்கில் எடுப்பாரா, அமைச்சர் ஹக்கீம் 0

🕔9.Aug 2017

– எம்.வை. அமீர் – கோலாகலமாக பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, இடைநடுவே கை விடப்பட்டுள்ள சாய்ந்தமருது தோணாவின் அபிவிருத்தி வேலைகள், மீண்டும் எப்போது ஆரம்பிக்கும் என்று, அப்பிரதேச மக்கள் கேள்வியெழுபு்புகின்றனர். மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமின் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் சாய்ந்தமருது தோணாவின் அபிவிருத்தி வேலைகள் சில காலங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும்

மேலும்...
ரவி – ஜனாதிபதி, மூடிய அறைக்குள் சந்திப்பு

ரவி – ஜனாதிபதி, மூடிய அறைக்குள் சந்திப்பு 0

🕔9.Aug 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று புதன்கிழமை, மூடிய அறைக்குள் சந்தித்துப் பேசியதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் அமைச்சரவைக் கூட்டம் நடந்து முடிந்த பின்னர், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் நழுவிக் கொண்ட அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஜனாதிபதியை பிரத்தியேகமாகச் சந்தித்து தனது

மேலும்...
அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தை செய்வதாயின், பொதுசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: கம்மன்பில

அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தை செய்வதாயின், பொதுசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: கம்மன்பில 0

🕔9.Aug 2017

அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தைச் செய்ய வேண்டுமாயின், அதற்காக, பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றினை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் செயலாளர் உதய கம்மன்பில நேற்று செவ்வாய்கிழமை தெரிவித்தார். அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தைச் செய்வதற்கான ஒரே நோக்கம், அனைத்து மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் 2019ஆம் ஆண்டு வரை ஒத்திப் போடுவதேயாகும் என்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்