பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுவதில், நம்பிக்கையுடன் உள்ளோம்: அமைச்சர் திஸாநாயக்க 0
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தினை நிறைவேற்றுவதில், தாம் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோரும், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பார்கள் என, தான் நம்புவதாகவும் அவர்