தலைமைப் பதவி வழங்கப்பட்டால், நிராகரிக்கப் போவதில்லை: மஹிந்த ராஜபக்ஷ
ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் தலைமைப் பதவி தனக்கு வழங்கப்பட்டால், அதனை ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பினை நிராகரிக்க வேண்டிய அவசியமில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆனாலும், இது தொடர்பில் சுதந்திரக் கட்சி அங்கத்தவர்களுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இதனைக் கூறினார்.
எவ்வாறாயினும், சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி, மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட வேண்டும் என்று, ஒன்றிணைந்த எதிரணியினர் கோரிக்கை விடுத்து வந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது.