பிள்ளைகளை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த தந்தைக்கு விளக்க மறியல்

🕔 May 6, 2024

னது பிள்ளைகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரொருவர் இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹன்வெல்ல – ஜல்தர பிரதேசத்தில் தந்தையினால் நேற்று (05) பணயமாகக் பிடிக்கப்பட்ட இரண்டு பிள்ளைகள், ஒன்பது மணித்தியால நடவடிக்கையின் பின்னர் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டனர்.

சந்தேகநபர் நேற்று மாலை ஜல்தரையில் உள்ள அரச உத்தியோகத்தர் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்த தனது மனைவியை கொலை செய்ய கைக்குண்டுடன் வந்து குழந்தைகளை பணயக்கைதிகளாக பிடித்து சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் – பெரும் முயற்சியின் பின்னர் சந்தேக நபரை கைது செய்தனர்.

குறித்த நபர் ஏதோ ஊசிமருந்தை பிள்ளைக்குச் செலுத்தியதால் இரண்டு பிள்ளைகளும் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த நபர் கொண்டுவந்த வெடிகுண்டை – செயலிழப்புப் பிரிவினரிடம் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்