வேட்புமனுவில் பெயர் இல்லாததால் வந்த கோபம்; அடித்துப் பறித்துக் கொண்டோடினார் ஆசாமி

🕔 December 18, 2017

ள்ளுராட்சி சபையொன்றில் போட்டியிடும் பொருட்டு சமர்ப்பிக்கப்படவிருந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்புமனுவொன்றினை, நபரொருவர் பறித்துச் சென்றுள்ளதாக  பொலிஸில் முறைப்பாடு செய்யபட்டுள்ளது.

ஹொரண – பொக்குனுவிட்ட பிரதேத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வேட்புமனுவினை வைத்திருந்த நபரை தாக்கி விட்டு, அவரிடமிருந்து வேட்புமனு பறித்துச் செல்லப்பட்டுள்ளது.

வேட்புமனுவினைப் பறித்துச் சென்றவர், சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட வேப்புமனுவில் தனது பெயர் உள்ளடக்கப்படவில்லை என்பதனாலேயே, அதனை சந்தேக நபர் பறித்துச் சென்றுள்ளார்.

இச் சம்பவம் குறித்து ஹொரண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 09ஆம் திகதியிலிருந்து நேற்றைய தினம் வரை, நாடு முழுவதும் ஆகக் குறைந்தது 07 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்