பதிலளிக்காமல் உளறிக் கொண்டிருந்தால், ஆவணங்களை வெளியிடுவேன்: மு.கா. தவிசாளர் பசீர் 0
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சொத்துக்கள் தொடர்பில், தான் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு, அந்தக் கட்சியின் தலைவர் தொடர்ந்தும் மேடை உளறல்களைப் பதில்களாக வழங்கிக் கொண்டிருந்தால், கட்சியின் சொத்துக்கள் தொடர்பில் தன்னிடமுள்ள ஆச்சரியம் தரும் ஆவணங்களை வெளியிடப் போவதாக, மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றின் மூலமாக, அவர் இதை கூறியுள்ளார்.