Back to homepage

பிரதான செய்திகள்

மறைந்தும் மறையாத மசூர் சின்னலெப்பை

மறைந்தும் மறையாத மசூர் சின்னலெப்பை 0

🕔24.May 2016

– முஹம்மட் – (கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மர்ஹும் மசூர் சின்னலெப்பையின் நான்காவது ஆண்டு நினைவு தினம் 22 மே 2016 அன்றாகும்) கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மசூர் சின்னலெப்பை வபாத்தாகி நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ளன. உடலால் அன்னார் மறைந்து விட்டபோதும், அவருடைய நல்ல

மேலும்...
பாதிக்கப்பட்ட இடங்களைப் புனரமைக்க, 25 ஆயிரம் கோடி ரூபாய் தேவை; நிதியமைச்சர்

பாதிக்கப்பட்ட இடங்களைப் புனரமைக்க, 25 ஆயிரம் கோடி ரூபாய் தேவை; நிதியமைச்சர் 0

🕔24.May 2016

இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை புனரமைப்பதற்காக, 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் கோடி ரூபா செலவாகும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு ஆகியவற்றினால் இதுவரை ஏற்பட்ட சேதங்கள் குறித்து முழுமையான கணிப்பீடு மேற்கொள்ளப்படாத நிலையிலேயே இந்த கணிப்பீட்டினைத் தெரிவிவிப்பதாக நிதியமைச்சர் கூறியுள்ளார். சட்டவிரோத குடியேற்றம்,

மேலும்...
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான, மு.காங்கிரசின் இரண்டாம் கட்டப் பணி நாளை ஆரம்பம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான, மு.காங்கிரசின் இரண்டாம் கட்டப் பணி நாளை ஆரம்பம் 0

🕔24.May 2016

  இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையிலான இரண்டாம் கட்டப் பணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – நாளை புதன்கிழமை முதல் ஈடுபடவுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவுள்ள இரண்டாம் கட்ட நடவடிக்கை சம்மந்தமான கலந்துரையாடல், கட்சியின் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் – நேற்று திங்கட்கிழமை கட்சியின் தலைமை காரியாலயம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு, முஸ்லிம்

மேலும்...
தாஜுதீன் கொலை தொடர்பில், பொலிஸ் பொறுப்பதிகாரியொருவர் நீதிமன்றில் ரகசிய வாக்குமூலம்

தாஜுதீன் கொலை தொடர்பில், பொலிஸ் பொறுப்பதிகாரியொருவர் நீதிமன்றில் ரகசிய வாக்குமூலம் 0

🕔24.May 2016

வசீம் தாஜுதீன் கொலை விவகாரம் தொடர்பில் பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் நீதவானிடம் ரகசிய வாக்கு மூலம் ஒன்றை வழங்கியுள்ளார். நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி, வெல்லால ஆராச்சிகே சரத்சந்திர என்பவரே இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை இந்த வாக்கு மூலத்தை வழங்கினார். மேற்படி நபர்

மேலும்...
மாகாண சபைகளின் அமைச்சர் பதவிகளில் விரைவில் மாற்றம்

மாகாண சபைகளின் அமைச்சர் பதவிகளில் விரைவில் மாற்றம் 0

🕔24.May 2016

மாகாண சபைகளின் அமைச்சர் பதவிகளில் மிக விரைவில் மாற்றம் ஏற்படும் என்று அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள மாகாண சபைகளிலேயே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள நேற்று நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும்

மேலும்...
பூண்டுலோயா சீன் தோட்டத்தில் மண்சரிவு அபாயம்; 130 பேர் இடம்பெயர்வு

பூண்டுலோயா சீன் தோட்டத்தில் மண்சரிவு அபாயம்; 130 பேர் இடம்பெயர்வு 0

🕔23.May 2016

– க. கிஷாந்தன் – பூண்டுலோயா சீன் தோட்டத்தில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக 29 குடும்பங்களை சேர்ந்த 130 பேர்  தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்கள் தற்பொழுது தோட்டத்திலுள்ள கலாசார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கான நிவாரண உதவிகள் தோட்ட நிர்வாகம் மற்றும் பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது. இத்தோட்டத்தில் 06,

மேலும்...
தாஜுதீன் கொலை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க கைது

தாஜுதீன் கொலை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க கைது 0

🕔23.May 2016

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க இன்று திங்கட்கிழமை சற்று முன்னர் கைது செய்யப்பட்டார். பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பிலேயே இவர் கைதாகியுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு மூன்றாவது தடவையாக இன்று விசாரணைக்குச் சென்றிருந்த நிலையில், இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாஜுதீன் கொலை வழக்கு தொடர்பான

மேலும்...
பாடசாலைகள் நாளை திறக்கப்படும்; சீருடையற்ற மாணவர்கள், சாதாரண உடைகளோடு செல்ல முடியும்

பாடசாலைகள் நாளை திறக்கப்படும்; சீருடையற்ற மாணவர்கள், சாதாரண உடைகளோடு செல்ல முடியும் 0

🕔22.May 2016

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. ஆயினும், சப்ரகமுவ மாகாணத்திலுள்ள 52 பாடசாலைகள் இதற்குள் உள்ளடங்க மாட்டாது. இயற்கை அனர்த்தம் காரணமாக சப்ரகமுவ மாகாணத்திலுள்ள பாடசாலைகள் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் மூடப்பட்டன. எவ்வாறாயினும், சப்ரகமுகவ மாகாண வயலக் கல்விப் பணிப்பாளர்களின் முடிவுக்கமைய அங்குள்ள பாடசாலைகளை மீளவும் திறக்க

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸ் அதன் இலக்கை அடையவில்லை; செயலாளர் ஹசனலி

முஸ்லிம் காங்கிரஸ் அதன் இலக்கை அடையவில்லை; செயலாளர் ஹசனலி 0

🕔22.May 2016

-எம்.வை. அமீர் — “முஸ்லிம் தேசியம் ஒன்றை ஸ்தாபித்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்ட போதிலும், கட்சியின் தலைவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், இந்தக் கட்சியானது, இரண்டு – மூன்று எனப் பிரிந்து கூறுபோடப்பட்டுள்ளதே தவிர, கட்சியின் இலக்கு அடையப்படவில்லை” என்று மு.காங்கிரசின் செயலாளரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசனலி

மேலும்...
அமுக்கக் குண்டு கிண்ணியாவில் மீட்பு

அமுக்கக் குண்டு கிண்ணியாவில் மீட்பு 0

🕔22.May 2016

– எப். முபாரக் – அமுக்கக் குண்டொன்றினை திருகோணமலை – கிண்ணியா கடற்கரையோரத்தில் நேற்று சனிக்கிழமை மாலை கிண்ணியா பொலிஸார் மீட்டனர். இந்தக் குண்டு கடலலையில் அடித்து வரப்பட்டதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. கிண்ணியா பழைய வைத்தியசாலைக்கு முன்னால் கடலில் குளிக்கச்சென்ற இளைஞர்கள்,  பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து இக்குண்டு மீட்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸர் கூறினார். குறித்த குண்டை செயலிழக்க

மேலும்...
வெள்ளத்தைப் பயன்படுத்திய கொள்ளையர்கள் 15 பேர் கைது

வெள்ளத்தைப் பயன்படுத்திய கொள்ளையர்கள் 15 பேர் கைது 0

🕔22.May 2016

வெள்ள அனர்த்தத்தைப் பயன்படுத்தி கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 15 பேரை, பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் தமது வீடுகள் மூழ்கியமையினை அடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இதனையடுத்து குறித்த வீடுகளுக்குள் புகுந்து அங்கிருக்கும் பொருட்களை சிலர் கொள்ளையிட்டு வருகின்றனர். அவ்வாறானவர்களில் 15 பேரையே பொலிஸார்

மேலும்...
இலங்கைக்கு நிவாரண உதவியாக 50 ஆயிரம் டொலர்கள்; சீன செஞ்சிலுவைச் சங்கம் வழங்கியது

இலங்கைக்கு நிவாரண உதவியாக 50 ஆயிரம் டொலர்கள்; சீன செஞ்சிலுவைச் சங்கம் வழங்கியது 0

🕔22.May 2016

இலங்கையில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு, சீன செஞ்சிலுவைச் சங்கம் நன்கொடையாக நிதி வழங்கியுள்ளது. இவ்வாறு வழங்கியுள்ள தொகை 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களாகும். சீன நாட்டின் இலங்கைக்கான தூதரகத்தின் அரசியல் செயலாளர் பென் புன்ச்டி, இந்த நிதியுதவியை நேற்று சனிக்கிழமை வழங்கினார். மேற்படி நன்கொடையானது – இலங்கை நாணயப் பெறுமதியில் இது

மேலும்...
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை இன்றும் பெய்யும்; பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிப்பு

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை இன்றும் பெய்யும்; பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிப்பு 0

🕔22.May 2016

நாட்டில் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவு அனர்த்தங்களால் மக்கள் ஒருபுறம் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டுவரும் நிலையைில் – மேல், வடமேல், தெற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று  ஞாயிற்றுக்கிழமையும் மழை பெய்யக் கூடும் என வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்று பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்திலும் மழை

மேலும்...
அட்டாளைச்சேனையில் கார் விபத்து; காற்றுப்பையின் உதவியுடன் பயணிகள் தப்பினர்

அட்டாளைச்சேனையில் கார் விபத்து; காற்றுப்பையின் உதவியுடன் பயணிகள் தப்பினர் 0

🕔22.May 2016

– சப்னி – பாரியளவில் கார் ஒன்று விபத்துக்குள்ளான போதும், அதனுள் பயணித்தவர்கள் எதுவித ஆபத்துக்களுமின்றி தப்பிய சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இடம்பெற்றது. கல்முனையிலிருந்து – அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த மேற்படி கார், அட்டாளைச்சேனை பிரதான வீதியிலுள்ள நிவ் ரமீஸா ஹொட்டலுக்கு முன்னால் இன்று அதிகாலை 3.00 மணியளவில் விபத்துக்குள்ளானது. வீதி

மேலும்...
புதிது செய்தித் தளம், ஓராண்டைப் பூர்த்தி செய்கிறது

புதிது செய்தித் தளம், ஓராண்டைப் பூர்த்தி செய்கிறது 0

🕔22.May 2016

‘புதிது’ செய்தித் தளம் இன்று (22 ஆம் திகதி) தனது முதலாவது வருடத்தை நிறைவு செய்கிறது. ஒரு செய்தித் தளத்தை தொடர்ச்சியாக நடத்திச் செல்வதென்பது பாரிய சவால்களுக்குரிய விடயமாகும். ஆயினும், இறைவனின் துணையுடன் நாம் வெற்றியடைந்திருக்கிறோம். ‘புதிது’ செய்தித் தளம், தனது சாத்தியங்களுக்கு உட்பட்ட வகையில், தகவல்களை வழங்குவதில் உறுதியுடன் செயற்பட்டிருக்கிறது. சமூக அவலங்கள் தொடர்பிலும், அரசியல்வாதிகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்