அட்டாளைச்சேனையில் கார் விபத்து; காற்றுப்பையின் உதவியுடன் பயணிகள் தப்பினர்
🕔 May 22, 2016
– சப்னி –
பாரியளவில் கார் ஒன்று விபத்துக்குள்ளான போதும், அதனுள் பயணித்தவர்கள் எதுவித ஆபத்துக்களுமின்றி தப்பிய சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இடம்பெற்றது.
கல்முனையிலிருந்து – அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த மேற்படி கார், அட்டாளைச்சேனை பிரதான வீதியிலுள்ள நிவ் ரமீஸா ஹொட்டலுக்கு முன்னால் இன்று அதிகாலை 3.00 மணியளவில் விபத்துக்குள்ளானது.
வீதி அருகிலிருந்த தொலைபேசிக் கம்பத்தில் மோதி, அதனை உடைத்துக் கொண்டு சென்ற கார் – பின்னர், மரமொன்றுடன் மோதியது.
ஆயினும், காரில் இருந்த காற்றுப்பையின் (
காரில் பயணித்தவர்கள் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர்களாவர்.
இருந்த போதும், இந்த விபத்தில் கார் முன்பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளது.