Back to homepage

Tag "பிணை"

ஏறாவூரில் இளைஞர்களைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை; பணியும் இடைநிறுத்தம்

ஏறாவூரில் இளைஞர்களைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை; பணியும் இடைநிறுத்தம் 0

🕔23.Oct 2021

ஏறாவூரில் இளைஞர்கள் இருவரை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு, நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் – பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் அவர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இரண்டு இளைஞர்களை மனிதாபிமானமற்ற முறையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கும் காட்சிகளைக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியாகின. ஏறாவூரில் நடந்த விபத்து

மேலும்...
றிசாட் பதியுதீனுக்குப் பிணை: 06 மாதங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்படுகிறார்

றிசாட் பதியுதீனுக்குப் பிணை: 06 மாதங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்படுகிறார் 0

🕔14.Oct 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனுக்கு, இரண்டு வழக்குகளில் இன்று (14) பிணை வழங்கி உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கு இன்று (14) கோட்டே நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, றிசாட் பதியுதீனை 50 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்

மேலும்...
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கு: நீதிமன்றத்தின் மூடிய அறையில், நேற்று நடந்தவை என்ன?

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கு: நீதிமன்றத்தின் மூடிய அறையில், நேற்று நடந்தவை என்ன? 0

🕔9.Oct 2021

– எம்.எப்.எம்.பஸீர் – ஈஸ்டர் தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணையளிப்பதா இல்லையா என்பது தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் 27 ஆம் திகதி அறிவிக்கபப்டும் என புத்தளம் மேல் நீதிமன்றம்

மேலும்...
றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனாருக்கு பிணை

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனாருக்கு பிணை 0

🕔17.Sep 2021

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த றிசாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் (மனைவியின் தந்தை) ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், இந்த வழக்கில் றிசாட் பதியுதீனை ஒக்டோபர் 01ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான்

மேலும்...
பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்ட ஜோடிக்கு கொரோனா தொற்று; பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவு

பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்ட ஜோடிக்கு கொரோனா தொற்று; பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவு 0

🕔3.Sep 2021

பலாங்கொடை, பெலிஹுல்ஓயா – பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் கொவிட் தொற்று உதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இது தொடர்பில் கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு பொலிஸார் அறிவித்ததன் பின்னர், சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பன்னிப்பிட்டியவில் வசித்து வந்த 24 வயதான

மேலும்...
றிஷாட் பதியுதீனுடைய மாமனாருக்கு கொரோனா தொற்று: பிணை கோரிய சட்டத்தரணிகள்

றிஷாட் பதியுதீனுடைய மாமனாருக்கு கொரோனா தொற்று: பிணை கோரிய சட்டத்தரணிகள் 0

🕔27.Aug 2021

றிஷாட் பதியூதீனின் மாமனாருக்கு (மனைவியின் தந்தை) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் தீ காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், றிஷாட் பதியூதீனின் மனைவியின் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக

மேலும்...
கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்கள் குவிந்து கிடப்பதைப் போல், ‘பேஸ்புக்’கில் போலிப் படம் வெளியிட்டவர் கைது

கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்கள் குவிந்து கிடப்பதைப் போல், ‘பேஸ்புக்’கில் போலிப் படம் வெளியிட்டவர் கைது 0

🕔23.Aug 2021

களுபோவில போதனா வைத்தியசாலையில் கொவிட் நோயினால் இறந்தவர்களின் உடல்கள் குவிந்து கிடப்பதைப் போன்ற போலியான படத்தை ‘பேஸ்புக்’கில் வெளியிட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் நுகேகொட பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் மீது –

மேலும்...
மாமாங்கம் கோயில் அறங்காவல்களுக்கு நீதிமன்றில் பிணை: பூசாரி உள்ளிட்ட ஆறு பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகினர்

மாமாங்கம் கோயில் அறங்காவல்களுக்கு நீதிமன்றில் பிணை: பூசாரி உள்ளிட்ட ஆறு பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகினர் 0

🕔9.Aug 2021

மத நிகழ்வு ஒன்றினை அண்மையில் நடத்தியமை தொடர்பில், மட்டக்களப்பு மாமாங்கம் கோயிலின் ஐந்து அறங்காவலர்கள் இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு – பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், குறித்த ஐவவரும் கோயிலின் தலைமைப் பூசாரியும் இன்று தொடக்கம் 14 நாட்களுக்கு கோயில் வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மாமாங்கம் கோயிலில் அண்மையில் நடைபெற்ற ஆடி அமாவாசை வழிபாடுகளின் போது, தனிமைப்படுத்தல்

மேலும்...
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரை பிணையில் விடுவிக்க உத்தரவு

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரை பிணையில் விடுவிக்க உத்தரவு 0

🕔16.Jun 2021

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மற்றும் உப காவல்துறை பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன சட்டவிரோதமான முறையில் ஆயுதக் களஞ்சியசாலையொன்றை நடத்திச் சென்றதாக போலி சாட்சியங்களை முன்வைத்த குற்றச்சாட்டில்

மேலும்...
யாழ் முதல்வருக்கு பிணை: ஜனாதிபதியிடம் பேசி, முதல் மன்னிப்பு பெற்றுக் கொடுத்ததாக அமைச்சர் தேவனந்தா தெரிவிப்பு

யாழ் முதல்வருக்கு பிணை: ஜனாதிபதியிடம் பேசி, முதல் மன்னிப்பு பெற்றுக் கொடுத்ததாக அமைச்சர் தேவனந்தா தெரிவிப்பு 0

🕔10.Apr 2021

யாழ்ப்பாண மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேற்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜரானார். இதற்கமைய, 02 லட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார். குறித்த வழக்கு, எதிர்வரும் ஜுன்

மேலும்...
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை 0

🕔1.Apr 2021

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஏழு பேரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கின் அடிப்படையில் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட மேற்படி சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் கடந்த மார்ச் மாதம் 17ஆம்

மேலும்...
முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் பிணையில் விடுவிப்பு

முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் பிணையில் விடுவிப்பு 0

🕔6.Jan 2021

முன்னாள் பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப், இன்று புதன்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.   லங்கா சதொசவுக்குச் சொந்தமான வாகனங்களை 2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முறைகேடாக பயன்படுத்தியமை குற்றச்சாட்டில், கடந்த டிசம்பர் 15ஆம் திகதி இவர் கிண்ணியாவில் வைத்து கைது செய்யப்பட்டார். கொழும்பிலிருந்து சென்ற குற்றப்

மேலும்...
குழந்தை வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை

குழந்தை வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை 0

🕔23.Dec 2020

குழந்தைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்டபோது, அவருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. தலா 02 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளுடன் கூடிய பிணை நிபந்தனைகளின் கீழ் சந்தேக நபர் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்...
றிசாட் பதியுதீனுக்கு பிணை வழங்கி, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவு

றிசாட் பதியுதீனுக்கு பிணை வழங்கி, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவு 0

🕔25.Nov 2020

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுதீனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்தது. கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன், இன்று வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் சார்பில்

மேலும்...
ஐந்து வருடங்களுக்கும் மேலாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான்: பிணையில் விடுதலை

ஐந்து வருடங்களுக்கும் மேலாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான்: பிணையில் விடுதலை 0

🕔24.Nov 2020

கொலைக் குற்றச்சாட்டில் கைதாகி, ஐந்து வருடங்களுக்கும் மேலாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் என அழைக்கப்படும் சிவேநேசத்துரை சந்திரகாந்தன் பிணையில் இன்று செவ்வாய்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் – அவரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட வழங்கில் சந்தேக நபராக அடையாளம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்