ஆஸ்துமா நோய்: உலகளவில் இலங்கை முன்னணியில் உள்ளதாக தெரிவிப்பு

🕔 April 26, 2024

ஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்களை அதிகம் கொண்ட நாடுகளில் இலங்கை முன்னணிக்கு வந்துள்ளதாக – இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் மக்கள்தொகையில் 10% முதல் 15% வரை ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியோர்களை பெரும் மன மற்றும் உடல் உபாதைகளுடன் பாதித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆஸ்துமா சரியாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது மரணத்திற்குக் கூட வழிவகுக்கும். சுமார் 95% ஆஸ்துமா நோயாளிகளின் நிலைமைகளை எளிமையான, மிகவும் செலவு குறைந்த, அதிக செயல்திறன் கொண்ட மருந்துகளால் கட்டுப்படுத்த முடியும் எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500,000 பேர் ஆஸ்துமாவால் இறக்கின்றனர் எனவும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு, ஆஸ்துமா தினம் மே 07 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளதாகவும், சுவாச நோய் நிபுணர்கள் சங்கத் தலைவர் டொக்டர் நெரஞ்சன் திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்