பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்ட ஜோடிக்கு கொரோனா தொற்று; பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவு

🕔 September 3, 2021

லாங்கொடை, பெலிஹுல்ஓயா – பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் கொவிட் தொற்று உதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இது தொடர்பில் கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு பொலிஸார் அறிவித்ததன் பின்னர், சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பன்னிப்பிட்டியவில் வசித்து வந்த 24 வயதான யுவதி ஒருவரும், மஹரகமவில் வசித்து வந்த 34 வயதான ஆண் ஒருவருமே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர்

இவர்கள் இருவரும் தனிமைப்படுத்தலில் இருக்கும் போது கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கத.

நீர்வீழ்ச்சிக்கு அருகில் இவர்கள் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டமையை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்