சிஐடியில் ஆஜராகுமாறு அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோவுக்கு அழைப்பு 0
கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடக பேச்சாளரான அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோவை, விசாரணையொன்றுக்காக நாளை மறுதினம் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (சிஐடி) அழைத்துள்ளனர். ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான சில விவரங்கள் தனக்குத் தெரியும் என – குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நம்புவதால் தனக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2021