குழந்தை வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை

🕔 December 23, 2020

குழந்தைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்டபோது, அவருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

தலா 02 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளுடன் கூடிய பிணை நிபந்தனைகளின் கீழ் சந்தேக நபர் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதி சந்தேக நபர் மீண்டும் மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சுமார் 30 குழந்தைகளை மேற்படி நபர் விற்பனை செய்தார் எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வல்புணர்வுக்குட்பட்டும், வேறு வழிகளிலும் கர்ப்பமான பெண்களைத் தொடர்பு கொண்டு, அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளை மேற்படி நபர் விற்பனை செய்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்பான செய்தி: குழந்தை விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் மாத்தளையில் கைது: கர்ப்பிணிகளுடன் ஒப்பந்தம் செய்து நடந்த மோசடி வியாபாரம் அம்பலம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்