குழந்தை வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை 0
குழந்தைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்டபோது, அவருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. தலா 02 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளுடன் கூடிய பிணை நிபந்தனைகளின் கீழ் சந்தேக நபர் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.