முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை

🕔 April 1, 2021

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஏழு பேரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கின் அடிப்படையில் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட மேற்படி சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி உத்தரவிட்டது.

மத்திய வங்கி பிணைமுறி வழங்கல் நடவடிக்கையின் போது 15 பில்லியன் ரூபா மோசடி செய்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் போது, இந்த மோசடி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்