Back to homepage

மேல் மாகாணம்

சில ஊடகங்களினதும், தேரர்களினதும் செயற்பாடுகள் தொடர்பில், ஜனாதியிடம் அமைச்சர் றிசாட் புகார்

சில ஊடகங்களினதும், தேரர்களினதும் செயற்பாடுகள் தொடர்பில், ஜனாதியிடம் அமைச்சர் றிசாட் புகார் 0

🕔13.May 2019

சமூகங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் சில செயற்பாடுகள் முன்னடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தார். ஜனாதிபதி தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்த விடயத்தை தெரிவித்தார்.  இங்கு மேலும் பேசிய அமைச்சர்;“நாட்டில் அண்மையில் ஏற்பட்ட

மேலும்...
றிசாட் பதியுதீனுக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு சம்பந்தனிடம் கோரிக்கை

றிசாட் பதியுதீனுக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு சம்பந்தனிடம் கோரிக்கை 0

🕔13.May 2019

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் கொண்டு வரவுள்ளதாகக் கூறப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர். சம்பந்தனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு தேசிய ஒன்றியத்தின் அமைப்பாளர் மாகல்கந்தே சுதந்த தேரர், இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். மேற்படி இருவருக்குமான சந்திப்பு இன்று

மேலும்...
தாக்குதலுக்கு உதவியோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்: அமைச்சர் அஜித் பீ பெரேரா

தாக்குதலுக்கு உதவியோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்: அமைச்சர் அஜித் பீ பெரேரா 0

🕔13.May 2019

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கும், அந்தத் தாக்குதல்களுக்கு உதவியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் கூறினார். தீவிரவாத்ததிற்கு எதிராக மரண தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு மட்டுமல்லாது அதற்கு உதவி

மேலும்...
கைது செய்யப்பட்டுள்ளோரில் 08 பேர் தற்கொலையாளிகள்: ராணுவத் தளபதி

கைது செய்யப்பட்டுள்ளோரில் 08 பேர் தற்கொலையாளிகள்: ராணுவத் தளபதி 0

🕔12.May 2019

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின் வாக்குமூலங்களின் படி,  எட்டுப்பேர் தம்மை தற்கொலையாளிகள் அடையாளப்படுத்தியுள்ளனர் என, ராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக தெரிவித்துள்ளார். அந்த தாக்குதலை மேற்கொண்டோர், இந்தியாவில் இருந்தே  அதிகளவில் திட்டங்களை வகுத்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது எனவும்  அவர் கூறியுள்ளார். வடக்கு – கிழக்கில் மீண்டும் ராணுவ பாதுகாப்பு வேண்டும் என கோருகின்றனர்

மேலும்...
சஹ்ரானுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டட்டும் என்று வீடியோ வெளிட்ட, முனாஜித் மௌலவி கைது

சஹ்ரானுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டட்டும் என்று வீடியோ வெளிட்ட, முனாஜித் மௌலவி கைது 0

🕔11.May 2019

நாட்டில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை தலைமையேற்று நடத்தியவர் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹாசிமுக்கு “அல்லாஹ் இரக்கம் காட்டட்டும்” என பிரார்த்தித்தும், “சஹ்ரானைப் பற்றி பிழையாகக் கூறுவதற்கு எவனுக்கும் அதிகாரம் கிடையாது” எனவும் கூறி, சர்ச்சைக்குரிய காணொளி ஒன்றினை வெளிநாட்டிலிருந்து ஃபேஸ்புக் மூலமாக வெளியிட்டிருந்த சேர்ந்த மௌலவி எம்.கே. முனாஜித் என்பவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில்

மேலும்...
புவக்பிட்டிய முஸ்லிம் ஆசிரியைகள், பாதுகாப்பு சோதனைக்கு அனுமதிக்காததால்தான் சர்ச்சை உருவானது: அமைச்சர் மனோ தெரிவிப்பு

புவக்பிட்டிய முஸ்லிம் ஆசிரியைகள், பாதுகாப்பு சோதனைக்கு அனுமதிக்காததால்தான் சர்ச்சை உருவானது: அமைச்சர் மனோ தெரிவிப்பு 0

🕔11.May 2019

அவிசாவளை – புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தில் ஹபாயா அணிந்து வந்த முஸ்லிம் ஆசிரியைகள் பாதுகாப்பு சோதனைக்கு அனுமதிக்காததை தொடர்ந்தே சர்ச்சை உருவானது. அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எனினும், சமூக ஊடகங்களில் உண்மையை மறைத்து, பொய்யான தகவல்கள் பரவுவதாகவும், தற்போதைய நாட்டு சூழலில் அனைவரும் பொறுப்புடன் நடக்க வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக

மேலும்...
சஹ்ரானின் மரணத்தை உறுதிப்படுத்த டீஎன்ஏ பரிசோதனை: கொழும்புக்கு அனுப்பப்பட்டார் சகோதரி மதனியா

சஹ்ரானின் மரணத்தை உறுதிப்படுத்த டீஎன்ஏ பரிசோதனை: கொழும்புக்கு அனுப்பப்பட்டார் சகோதரி மதனியா 0

🕔11.May 2019

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி என்று அரசாங்கத்தால் கருதப்படும் சஹ்ரான் ஹாசிம் என்பவரின் மரணத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு, அவரின் மகள் மொஹமத் சஹ்ரான் ருஸைனாவின் ரத்தத்தைப் பெற்று டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொள்வதற்கு கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அனுமதி வழங்கியுள்ளது. சாய்ந்தமருதிலுள்ள

மேலும்...
நிறுத்தாமல் சென்ற வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: சாரதி பலி

நிறுத்தாமல் சென்ற வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: சாரதி பலி 0

🕔11.May 2019

வத்தளையில் கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று அதிகாலை நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. வத்தளை – ஹணுபிட்டிய பகுதியில் நேற்றிரவு கடற்படையினரால் விசேட சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது காரை நிறுத்துமாறு கடற்படையினர் சமிக்ஞை விடுத்த போதிலும், காரை நிறுத்தாமல் ஓட்டுநர் சென்றதாக பொலிஸார்

மேலும்...
என்மீதான குற்றச்சாட்டுகளை கண்டறிய, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமியுங்கள்: அமைச்சர் றிசாட், சபையில் வேண்டுகோள்

என்மீதான குற்றச்சாட்டுகளை கண்டறிய, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமியுங்கள்: அமைச்சர் றிசாட், சபையில் வேண்டுகோள் 0

🕔10.May 2019

குண்டுத்தாக்குதல்களின் பின்னர் தன் மீது சுமத்தப்படும் குற்றாச்சட்டுக்கள் மற்றும் ஏனைய சம்பவங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிந்து அதனை வெளிப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்குமாறு சபாநாயாகர் கரு ஜயசூரியாவிடம் அமைச்சர் றிசாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் கூறினார். இது தொடர்பா க அமைச்சர்

மேலும்...
எரிபொருள் விலை நள்ளிரவு தொடக்கம் அதிகரிப்பு

எரிபொருள் விலை நள்ளிரவு தொடக்கம் அதிகரிப்பு 0

🕔10.May 2019

எரிபொருளுக்கான விலைகள் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடக்கம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதற்கிணங்க, 92 ஒக்டைன் பெற்றோலுக்கான லீட்டர் ஒன்றின் விலை 03 ரூபாவினாலும், 95 ஒக்டைன் பெற்றோலின் விலை லீட்டருக்கு 05 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது. அதேவேளை, சுப்பர் டீசல் லீட்டருக்கு 03 ரூபாவினால் அதிகரித்திருக்கிறது. ஓட்டோ டீசலின் விலையில் மாற்றங்கள் இல்லை.

மேலும்...
இலங்கை முஸ்லிம்கள் மேலும் துருவப்பட்டுள்ளதாக உணர்கின்றனர்: அமெரிக்க தூதுவரிடம் ஹக்கீம் தெரிவிப்பு

இலங்கை முஸ்லிம்கள் மேலும் துருவப்பட்டுள்ளதாக உணர்கின்றனர்: அமெரிக்க தூதுவரிடம் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔10.May 2019

நாட்டில் அண்மையில் நடந்த துரதிஷ்ட சம்பவங்களின் பின்னர், இலங்கை முஸ்லிம்கள் தாம் மேலும் துருவப்படுத்தப்பட்டுள்ளதாக உணர்கின்றனர். அவர்களது அச்சத்தை போக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதே இன்றைய அவசர தேவையாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் அலய்னா

மேலும்...
முஸ்லிம்களை பயங்கரவாத சமூகமாக காட்டுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்: தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள்

முஸ்லிம்களை பயங்கரவாத சமூகமாக காட்டுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்: தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள் 0

🕔9.May 2019

பயங்கரவாதம் என்பது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று. இதனை செய்தவர்கள் முஸ்லிம்களாக கருதப்படமாட்டார்கள் என தெரிவித்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர்  ரிஸ்வி முப்தி, தற்போதைய அச்ச சூழ்நிலையிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கும் போராட்டத்திற்கு ஊடகங்கள் உற்பட  சகல தரப்பினரின் ஒத்துழைப்பை கோருவதாகவும் கூறினார். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்

மேலும்...
மு.காங்கிரஸின் முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்

மு.காங்கிரஸின் முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்கு விளக்க மறியல் 0

🕔9.May 2019

உயர்தர தொலைத் தொடர்பு சாதனமொன்றினை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீமை, இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீர் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று புதன்கிழமை நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இவர் ஆஜர் செய்யப்பட்டார். கடந்த 07ஆம் திகதி

மேலும்...
பயங்கரவாதி சஹ்ரானின் மரணத்தை உறுதிப்படுத்த, சகோதரியின் இரத்த மாதிரியைப் பெற்று  டீ.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள உத்தரவு

பயங்கரவாதி சஹ்ரானின் மரணத்தை உறுதிப்படுத்த, சகோதரியின் இரத்த மாதிரியைப் பெற்று டீ.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள உத்தரவு 0

🕔9.May 2019

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரும், தற்கெலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதியுமான சஹ்ரான் ஹாஷிமின் மரணத்தை உறுதிப்படுத்துவதற்கு, உடற்கூறு மற்றும் டீ.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொண்டு, அறிக்கையை கையளிப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அனுமதியளித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தற்கொலைத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிம், கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் மரணமடைந்துவிட்டார்

மேலும்...
கொச்சிக்கடை தேவாலய தற்கொலைக் குண்டுதாரியின் சகோதரன் உள்ளிட்ட மூவர் கைது

கொச்சிக்கடை தேவாலய தற்கொலைக் குண்டுதாரியின் சகோதரன் உள்ளிட்ட மூவர் கைது 0

🕔9.May 2019

கொழும்பு – கொச்சிக்கடை கிறிஸ்தவ தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் சகோதரன் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். கொழும்பு – கொச்சிக்கடை கிறிஸ்துவ தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய தற்கொலைதாரி, கிங்ஸ்பரி ஹோட்டலில் தாக்குதல் நடத்திய நபருக்கு சொந்தமான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்