பொலிஸாரால் தேடப்படுபவர், வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் அதிசயம் நல்லாட்சியில் மட்டுமே நடக்கிறது: இபாஸ் நபுஹான் கிண்டல் 0
நான்கு பொலிஸ் குழுக்களால் தேடப்படும் நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக கூறும் அதிசயம் நல்லாட்சியில் மட்டுமே நடக்கிறது என பாணந்துறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கிண்டலடித்துள்ளார். பொலிஸாரால் தேடப்படும் நபர் ஒருவர், ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் அதிசயமும் வழக்குக்கு சமூகமளிக்காமல் நீதிமன்றுக்கு மருத்துவச் சான்றிதழ் அனுப்பும் அதியமும் கூட, இந்த நல்லாட்சியிலே நடக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும்