சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோருவது தொடர்பில் ஆராய்வதாக நிதியமைச்சர் பசில் தெரிவிப்பு: ஆட்சியாளர்களின் பிடிவாதம் தளர்கிறதா? 0
சர்வதேச நாணய நிதியத்துடன் (ஐ.எம்.எஃப்) ஒப்பந்தம் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும், கடனைத் திருப்பிச் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ‘லண்டன் பைனான்சியல் டைம்ஸ்’க்கு அவர் இந்த விடயத்தைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “கடனை திருப்பிச் செலுத்தாதிருப்பதற்கும், பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கும்