Back to homepage

Tag "கடன்"

சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோருவது தொடர்பில் ஆராய்வதாக நிதியமைச்சர் பசில் தெரிவிப்பு: ஆட்சியாளர்களின் பிடிவாதம் தளர்கிறதா?

சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோருவது தொடர்பில் ஆராய்வதாக நிதியமைச்சர் பசில் தெரிவிப்பு: ஆட்சியாளர்களின் பிடிவாதம் தளர்கிறதா? 0

🕔27.Jan 2022

சர்வதேச நாணய நிதியத்துடன் (ஐ.எம்.எஃப்) ஒப்பந்தம் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும், கடனைத் திருப்பிச் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ‘லண்டன் பைனான்சியல் டைம்ஸ்’க்கு அவர் இந்த விடயத்தைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “கடனை திருப்பிச் செலுத்தாதிருப்பதற்கும், பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கும்

மேலும்...
இலங்கைக்கு சீனா வழங்கவுள்ள கடன்; ‘அதுக்கு சரிப்பட்டு வராது’

இலங்கைக்கு சீனா வழங்கவுள்ள கடன்; ‘அதுக்கு சரிப்பட்டு வராது’ 0

🕔24.Dec 2021

சீனாவிடம் இருந்து கிடைக்க உள்ளதாக கூறப்படும் 1.5 பில்லியன் டொலர் பெறுமதியுடைய கடனுதவியானது, டொலரில் கிடைக்காது எனவும் அது சீனாவின் யுவான் நாணய மூலம் வழங்கப்படும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டப்ளியூ.ஏ. விஜேவர்தன தெரிவித்துள்ளார். இதனால், இலங்கை பெற்றுக்கொண்டுள்ள டொலர் மூலமான கடன்களை செலுத்த இந்த பணத்தை பயன்படுத்த

மேலும்...
நைஜீரியாவிடம் நீண்ட கால கடன் அடிப்படையில் கச்சா எண்ணெய் கேட்டு, கம்மன்பில கலந்துரையாடல்

நைஜீரியாவிடம் நீண்ட கால கடன் அடிப்படையில் கச்சா எண்ணெய் கேட்டு, கம்மன்பில கலந்துரையாடல் 0

🕔20.Dec 2021

நைஜீரியாவிடமிருந்து நீண்டகாலக் கடன் அடிப்படையில் கச்சா எண்ணெயைப் பெறுவது தொடர்பாக இன்று இலங்கை கலந்துரையாடியுள்ளது. எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, இலங்கைக்கான நைஜீரிய உயர்ஸ்தானிகர் அஹமட் சுலேவுடன் இது குறித்து சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் அமைச்சர் கம்மன்பில தனது ட்விட்டர் பக்கத்தில் படங்களுடன் பதிவொன்றையும் இட்டுள்ளார். கச்சா எண்ணெய்யை அதிகளவில் ஏற்றுமதி செய்யும்

மேலும்...
கடன் பொறியிலிருந்து இலங்கையை காப்பாற்றியுள்ளோம்:  சீனா அறிவிப்பு

கடன் பொறியிலிருந்து இலங்கையை காப்பாற்றியுள்ளோம்: சீனா அறிவிப்பு 0

🕔30.Nov 2021

மேற்குலக கடன் பொறியில் இருந்து இலங்கையை சீனா காப்பாற்றியதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு விட தயாராகிய நேரத்தில் சீனா உதவுவதற்காக முன்வந்து, இலங்கையை கடன் பொறியில் இருந்து காப்பாற்றியது எனவும் சீனத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச பிணை முறிப்

மேலும்...
இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவுக்காக ஓமான் 72,500 கோடி ரூபா கடன்: அமைச்சர் கம்மன்பில தகவல்

இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவுக்காக ஓமான் 72,500 கோடி ரூபா கடன்: அமைச்சர் கம்மன்பில தகவல் 0

🕔22.Oct 2021

நாட்டுக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்தவற்காக ஓமானிடம் இருந்து 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 72500 கோடி ரூபா) கடனுதவியாக பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இதனை தெரிவித்தார். அதற்கு மேலதிகமாக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியாவிடம்

மேலும்...
உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 10 ஆயிரம் கோடி ரூபா கடன்: அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவிப்பு

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 10 ஆயிரம் கோடி ரூபா கடன்: அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவிப்பு 0

🕔1.Oct 2021

உலக வங்கியிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 10ஆயிரம் கோடி ரூபா) கடனை இலங்கை பெறும் என்று, நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ இன்று அறிவித்தார். கிராமப்புற வீதிகள், விவசாய சேவைகளை மேம்படுத்துவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் உலக வங்கியின் நிர்வாக

மேலும்...
மன்னாரில் இருக்கும் எண்ணெய் கனிய வளத்தின் மூலம், நாட்டின் கடனை அடைக்க முடியும்: அமைச்சர் கம்மன்பில

மன்னாரில் இருக்கும் எண்ணெய் கனிய வளத்தின் மூலம், நாட்டின் கடனை அடைக்க முடியும்: அமைச்சர் கம்மன்பில 0

🕔16.Sep 2021

நாட்டின் கடன் சுமையை விடுவிக்க மன்னார் கனிய எண்ணெய் வளத்தால் தான் முடியும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மன்னார் பேசாலைப் பகுதியில் எம் -2 என அழைக்கப்படும் காவிரி பள்ளத்தாக்கில் 2,000 மில்லியன் பீப்பாய்கள் கனிய எண்ணெய் வளம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 150 பில்லியன் அமெரிக்க டொலர்

மேலும்...
உலக வங்கியிடமிருந்து 10 ஆயிரம் கோடி ரூபா கடன்: அரசாங்கம் பேச்சுவார்த்தை

உலக வங்கியிடமிருந்து 10 ஆயிரம் கோடி ரூபா கடன்: அரசாங்கம் பேச்சுவார்த்தை 0

🕔13.Sep 2021

உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை நாணய பெறுமதியில் சுமார் 10007 கோடி ரூபாவாகும்) கடனாகக் கோரியுள்ளதாக திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கிராமங்களில் வீதிகளை அமைப்பதற்காகவும் விவசாயத் திட்டங்களை மேற்கொள்வதற்காகவும் இந்தக் கடன் கோரப்பட்டுள்ளது. 3000 கிலோமீட்டர் வீதிகளை அமைப்பதற்கு 450 மில்லியன் டொலர்களையும், விவசாய திட்டங்களுக்கான களஞ்சியசாலைகள் மற்றும் சேகரிப்பு

மேலும்...
கொவிட் நிவாரணப் பணிக்காக சம்பளத்தை வழங்க முடியாது: ராஜாங்க அமைச்சர் பியல் தெரிவிப்பு

கொவிட் நிவாரணப் பணிக்காக சம்பளத்தை வழங்க முடியாது: ராஜாங்க அமைச்சர் பியல் தெரிவிப்பு 0

🕔24.Aug 2021

கொவிட் நிவாரப் பணிகளுக்காக தனது சம்பளத்தை வழங்க முடியாது என்று ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். அரச வங்கியொன்றில் பெற்றுக்கொண்ட கடனுக்காக தனது சம்பளத்தொகை அப்படியே வெட்டப்படுவதால், கொவிட் பணிக்காக தனது சம்பளத்தை வழங்க முடியாத இக்கட்டான நிலைக்கு தான் தள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
அனைவரும் அர்ப்பணிப்புக்குத் தயாராக வேண்டும்; நாட்டை அராஜக நிலைக்குக் கொண்டுவரத் தயாராகாதீர்கள்: ஜனாதிபதி

அனைவரும் அர்ப்பணிப்புக்குத் தயாராக வேண்டும்; நாட்டை அராஜக நிலைக்குக் கொண்டுவரத் தயாராகாதீர்கள்: ஜனாதிபதி 0

🕔20.Aug 2021

நாட்டை மீண்டும் ஒரு முறை முற்றாக முடக்கினால், இந்நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும். அது, இந்த நாடு பொறுத்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலை அல்ல எனத் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இனிவரும் நாட்களில், இந்நாட்டை நீண்ட காலத்துக்கு மூடி வைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின், நாட்டிலுள்ள அனைவரும், மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்குத் தயாராக வேண்டுமென்றும் அனைவரிடமும்

மேலும்...
தற்போதைய அரசாங்கம் 88000 கோடி ரூபாவை அச்சிட்டுள்ளது: சம்பிக்க குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கம் 88000 கோடி ரூபாவை அச்சிட்டுள்ளது: சம்பிக்க குற்றச்சாட்டு 0

🕔15.Jul 2021

கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் 88000 கோடிரூபாவை அச்சிட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார். இது சிம்பாப்வேயின் மூலோபாயமாக காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை கடந்த நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் 2900 கோடி ரூபா மட்டுமே அச்சிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்கு அவர்

மேலும்...
நாடு ராணுவ மயமாக்கலை நோக்கி நகர்கிறது: நாடாளுமன்றத்தில் ரணில் குற்றச்சாட்டு

நாடு ராணுவ மயமாக்கலை நோக்கி நகர்கிறது: நாடாளுமன்றத்தில் ரணில் குற்றச்சாட்டு 0

🕔23.Jun 2021

ராணுவம் நாட்டை நிர்வகித்து வருகிறது என்றும் இது பிழையானது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்க இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார். முதலீட்டுச் சபை மாநாட்டில் ராணுவத் தளபதி உரையாற்றியமையினால், வந்த முதலீட்டாளர்களும் திரும்பிச் சென்றிருப்பார்கள் என்றும் அவர் இதன்போது கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; “செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை

மேலும்...
அதிக கடன்களைக் கொண்ட இரண்டாவது நாடாக இலங்கை: நாடாளுமன்றில் கபீர் ஹாசிம் தகவல்

அதிக கடன்களைக் கொண்ட இரண்டாவது நாடாக இலங்கை: நாடாளுமன்றில் கபீர் ஹாசிம் தகவல் 0

🕔24.Mar 2021

உலகில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் அதிக கடன்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது எனவும், கடன் நெருக்கடிகளை அரசாங்கம் மறைத்து மக்களை ஏமாற்றுகின்றது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குற்றஞ் சாட்டியுள்ளார். பங்களாதேஷ் நாட்டிடம் கடன் கேட்கும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளமை மிக மோசமான நிலைமையாகும்

மேலும்...
அலுவலகங்களில் கடமை நேரங்களை நெகிழ்வான முறையில் கடைப்பிடிக்க, அரசாங்கம் கவனம்

அலுவலகங்களில் கடமை நேரங்களை நெகிழ்வான முறையில் கடைப்பிடிக்க, அரசாங்கம் கவனம் 0

🕔12.Jan 2021

அலுவலக கடமைகளுக்காக உரிய கடமை நேரத்துக்குப் பதிலாக நெகிழ்வான (Flexible) கடமை நேரத்தை தீர்மானிப்பது தொடர்பிலான வேலைத்திட்டத்துக்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நேற்யை தினம் இவ்வாண்டுக்கான பாடசாலை முதலாம் தவணை ஆரம்பமானதை தொடர்ந்து, பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு ஆர்வம் கொண்டுள்ளனர். தற்போதைய கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் தமக்குரிய வானகங்களில் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில்

மேலும்...
கொவிட் – 19 தடுப்பு மருந்து கொள்வனவுக்காக, உலக வங்கியிடமிருந்து கடன் பெற, அரசாங்கம் பேச்சுவார்த்தை

கொவிட் – 19 தடுப்பு மருந்து கொள்வனவுக்காக, உலக வங்கியிடமிருந்து கடன் பெற, அரசாங்கம் பேச்சுவார்த்தை 0

🕔20.Dec 2020

கொவிட் – 19 தடுப்பு மருந்தை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியிடமிருந்த 10 பில்லியன் ரூபா கடனைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்வார்த்தைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என, சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை, பெரும்பாலானோருக்குத் தேவையான தடுப்பு மருந்துகளை வாங்குவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிலிருந்து இலகு கடன்களைப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்